ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தாக்குதல் சதித்திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரை நீதிமன்றம் விடுதலைச் செய்தது

அஹ்மதாபாத்,ஆக29:குஜராத் முஸ்லிம் இனப் படுகொலைக்கு பழிவாங்க தீவிரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டினார்கள் என குற்றஞ்சாட்டி 9 கைதுச் செய்யப்பட்ட வழக்கில் அவர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுவித்துள்ளது.

இதில் 5 பேர் ஹைதராபாத்தைச் சார்ந்தவர்கள். பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் தாக்குதலை நடத்த திட்டமிட்டார்கள் என்பதுதான் இவர்கள் மீதான வழக்கு.

குற்றம் சுமத்தப்பட்டோர்களுக்கு எதிராக குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பினால் இயலவில்லை என நீதிபதி எ.ஹெச்.ஷா தெரிவித்தார்.

சதித்திட்டம், தேசத்திற்கு எதிரான போர் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு ஒரு ஆதாரத்தைக்கூட சமர்ப்பிக்க அரசுத் தரப்பால் இயலவில்லை என வழக்கறிஞர் இல்யாஸ் கான் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: