அணுசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அணுசக்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ஈரானின் புதிய ஆளில்லா விமானம் அறிமுகம்

டெஹ்ரான்,ஆக23:ஈரான் சுயமாக நிர்மாணித்த நீண்டதூர குண்டுவீசும் பைலட் இல்லாத விமானத்தை(ட்ரோன்) அறிமுகம் செய்தார் அந்நாட்டு அதிபர் அஹ்மத் நிஜாத். ஈரானின் எதிரிகளுக்கு மரணத்தின் தூதர்தான் இது என அறிமுக விழாவில் உரை நிகழ்த்தினார் நிஜாத்.

பாதுகாப்புத்துறையின் தேசிய தினத்தில்தான் கர்ரார்(முன் சென்று தாக்குவது) என்ற பெயரிடப்பட்ட நான்கு மீட்டர் நீளமுடைய இந்த குண்டுவீச்சு விமானம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணம் செய்ய இயலக்கூடிய இவ்விமானம் 250 பவுண்ட் எடையுள்ள இரண்டு குண்டுகளை தாங்கும் சக்திக் கொண்டது.

ராணுவத்தை பாராட்டிய நிஜாத், எதிரிகளுக்கு ஈரானை தாக்குவதற்கான ஆர்வம் முடியும் வரை இது தொடரும் என அறிவித்தார்.

ஈரான் தங்களின் முதல் அணுசக்தி நிலையத்தின் செயல்பாட்டை துவக்கிய மறுநாள்தான் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கியாம்-1 கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் சோதித்தது. 1980 களின் இறுதியிலேயே பைலட் இல்லாத கண்காணிப்பு விமானங்களை ஈரான் தயாரித்திருந்தது.

1992 ஆம் ஆண்டு முதல் சுயமாக டாங்குகளும், கவச வாகனங்களும், ஏவுகணைகளும், டார்பிடோக்களும் ஈரான் தயாரித்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையில் எரிபொருள் நிரப்புதல் துவங்கியது

டெஹ்ரான்,ஆக22:ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையான புஷஹரில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியது.

தெற்கு ஈரானில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் ரஷ்ய அதிகாரிகளின் முன்னிலையில் இப்பணித் துவங்கியது. ரஷ்யாவின் மேற்பார்வையில் நடைபெறும் இந்தத்திட்டத்திற்கு எரிபொருள் அளிப்பதும், கழிவுகளை சேகரிப்பதும் ரஷ்யாவாகும்.

அணுசக்தி செறிவூட்டுதல் திட்டத்தின் பெயரால் ஐ.நா நான்குமுறை ஈரானின் மீது தடையை ஏற்படுத்தியுள்ளது.பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் செலவிட்டு புஷஹர் அணுசக்தி நிலைய நிர்மாணம் பூர்த்தியானது.

எல்லாவித நிர்பந்தங்களையும், தடைகளையும் தாங்கிக் கொண்டு ஈரானின் அமைதியான அணுசக்தித்திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்திப்பிரிவு தலைவர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்தார்.

இஸ்லாமிக் குடியரசின் எதிரிகளுக்கெதிரான வெற்றியாக சிறப்பிக்கப்படும் இத்திட்டத்தின் துவக்கத்தை தேசிய திருவிழாவாகக் கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு மாதத்திற்குள் அணுசக்தி நிலையத்திலிருந்து மின்சாரம் உற்பத்திச் செய்யப்படும் எனக் கருதப்படுகிறது.செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ள ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதனை பயன்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட சில மேலைநாடுகள் பிரச்சாரம் செய்துவருகின்றன.

ஆனால், புஷஹரில் யுரேனியம் மூன்று சதவீதம் மட்டுமே செறிவூட்டப்படுகிறது.

மருத்துவ ஆராய்ச்சி ரியாக்டருக்காக 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தையும் ஈரான் துவக்கியுள்ளது.நதான்ஸ் ப்ளாண்டில் தேவையான செண்ட்ரிஃப்யூஜ்கள் நிறுவிவிட்டால் 30 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்திச் செய்யலாம் என ஸாலிஹி தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

ஈரானின் அணுசக்தி ரியாக்டர் உடனடியாக செயல்படத் துவங்கும்

மாஸ்கோ,ஆக,14:ஈரானின் முதல் அணுசக்தி ரியாக்டரின் செயல்பாடு அடுத்தவாரம் துவங்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யன் ஸ்டேட் அட்டாமிக் கார்ப்பரேசனில் நிறுவப்பட்டுள்ள புஷ்ஹர் ரியாக்டரில் எரிபொருள் நிரப்புவதற்கான பணியை பொறியாளர்கள் உடனடியாக துவங்குவார்கள்.

ஆறுமாதம் முன்பே ரியாக்டர் செயல்படுவதற்கு தயாராக இருந்தது. 1992 ஆம் ஆண்டில்தான் ஈரானில் அணுசக்தி நிலையம் நிறுவ ரஷ்யா உதவத் துவங்கியது. 1974 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் உதவியுடன் இதற்கான முயற்சிகள் துவங்கிய பொழுதிலும், 1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியைத் தொடர்ந்து இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் ரஷ்யாவின் உதவியுடன் துவங்கிய அணுசக்தி ரியாக்டர் நிர்மாணம் 2007 ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேகமாக நடைபெற ஆரம்பித்தது. இந்தமாதம் 21 ஆம் தேதி ரியாக்டரில் எரிபொருள் நிரப்பப்படும் என கார்ப்பரேசன் செய்தித் தொடர்பாளர் ஸெர்ஜி நோஸிக்கோவ் தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஈரானின் செறிவூட்டல் நெருக்கடிக்கு ஏறக்குறைய தீர்வாக அமையுமென்று எதிர்பார்க்கலாம். சர்வதேச அளவில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்ட சூழலுக்கிடையில் அபூர்வ சாதனை இது என ஈரான் மக்கள் கருத்துத் தெரிவித்ததாக பி.பி.சி கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

புதன், 19 மே, 2010

துருக்கியுடன் அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது.


டெஹ்ரான்:ஈரானின் சுத்திகரிக்கப்படாத யுரேனியத்திற்கு பகரமாக துருக்கியிடமிருந்து செறியூட்டப்பட்ட யுரேனியத்தை பெறுவதற்கான அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தை ஈரான் அங்கீகரித்தது. பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மத்தியஸ்தராக பங்கேற்ற மராத்தான் பேச்சுவார்த்தையின் முடிவில் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாதும், துருக்கி அதிபர் ரஜப் தய்யிப் உருதுகானும் நேற்று அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின்படி சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் மேற்பார்வையில் ஈரான் 1.2 டன் பகுதி செறியூட்டப்பட்ட யுரேனியத்தை துருக்கிக்கு வழங்கும். பகரமாக துருக்கி ஈரானுக்கு 120 கிலோகிராம் அணுசக்தி எரிபொருளை வழங்கும். இதனை ஈரான் மருத்துவ ஆய்வு ரியாக்டர்களில் பயன்படுத்தும்.

ஒப்பந்தத்தின் முழுவிபரத்தையும் சர்வதேச அணுசக்தி ஏஜன்சியிடம் அறிவித்து அங்கீகாரம் பெறவேண்டும். ஒப்பந்தத்தின் சரத்துகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக்கொள்ளுமா என்பது தெளிவாகவில்லை. ஈரானுக்கெதிராக புதிய தடையை ஏற்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கடுமையான முயற்சிகளை மேற்க்கொண்டிருக்கும் வேளையில் இவ்வொப்பந்தம் கையெழுத்திடப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

ஐ.நா உத்தரவின்படி அணுசக்தி எரிபொருள் பரிமாற்ற ஒப்பந்ததத்திற்கான பேச்சுவார்த்தை ஏற்கனவே துவங்கியிருந்தாலும், சில நிபந்தனைகளை அங்கீகரிக்க ஈரான் தயங்கியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருந்தது. அணுசக்தி எரிபொருள் பரிமாற்றம் ஒரே தடவையில் ஈரானில் வைத்து நடைபெறவேண்டும் என்பதில் ஈரான் பிடிவாதமாக இருந்ததால் பேச்சுவார்த்தை தோல்வியுறக் காரணமாகும்.

ஆனால் 20 சதவீதம் செறியூட்டப்பட்ட யுரேனியம் பரிமாற்றத்தில் துருக்கி தோல்வியுற்றால் ஈரானின் சுத்திகரிக்கப்படாத யுரேனியத்தை துருக்கி முற்றிலும் திருப்பியளிக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் ஒன்றாகும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், ஈரானின் அணுசக்தி பிரச்சனையில் பேச்சுவார்த்தையின் வழியை மீண்டும் துவக்குவதற்கு ஐ.நாவின் நிரந்தர உறுப்பு நாடுகளோடும், ஜெர்மனியோடும் கோரிக்கை விடுத்தார்.

புதிய ஒப்பந்தம் கையெழுத்திட்ட சூழலில் ஈரானுக்கெதிராக கூடுதல் தடைகளை ஏற்படுத்துவதை நியாயப்படுத்த இயலாது என துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் அஹ்மத் தாவூதோக்லு தெரிவித்தார். ஈரானுடன் துருக்கியின் பேச்சுவார்த்தை தோல்வியுறும் என அமெரிக்காவும், ரஷ்யாவும் கருதியிருந்தன. ஆனால் கடைசி முயற்சியாக பிரேசில் அதிபர் மத்தியஸ்தம் வகிப்பதற்காக ஈரானுக்கு வருகைப் புரிந்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்