செவ்வாய், 13 ஜூலை, 2010

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக இராணுவ விசாரணை பத்திரிக்கைகளின் இட்டுக்கட்டு

பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிராக இராணுவ விசாரணை நடத்தப்படும் என்ற செய்தி பொய்யானது,பத்திரிக்கைகளால் இட்டுக் கட்டப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

இது குறித்த செய்தியை போலீஸூம், அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி ஒரு விசாரணை குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று உள்துறை அமைச்சர் முள்ளப்பள்ளி இராமச்சந்திரன் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

இருந்தாலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குறித்து பத்திரிக்கைகள் கதை புனைவதை விடவில்லை.

நேற்று மலையாள நாளிதழ் ஒன்று இந்தக் கதையைப் புனைந்து வெளியிட்டது. உடனே அதை எந்த ஆய்வும் செய்யாமல் தொலைக்காட்சி சானல்களும் வானொலிகளும் வாந்தி எடுத்ததை தொடர்ந்து 'இராணுவ உளவுத்துறை விசாரணை' களை கட்டியது. இதில் தமிழக ஃபாசிச பத்ரிக்கையான தினமலரும் மற்ற நாளிதழ்களும் தனக்கே உரித்தான முறையில் மேற்கண்ட செய்தியை வாந்தி எடுத்து வருகின்றன.

அண்ணல் நபிகளாரை அவமதித்து களங்கத்தை உண்டுபண்ணும் வகையில் கேள்வித்தாள் தயாராக்கிய பேராசிரியரின் கை வெட்டப்பட்ட சம்பவம் நடந்த அன்றிலிருந்து பத்திரிக்கைகள் வெளியிடும் யூகங்களின் தொடர்ச்சியே இது.

இந்த சம்பவத்தைச் சாக்காக வைத்து பத்திரிக்கைகள் என்ன வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்று தந்திரமாக போலீஸ் அனுமதி கொடுத்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கை துண்டிப்பு வழக்குடன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிடும் சாக்கில் பத்திரிக்கைகள் நடத்தும் மோசமான பிரச்சாரங்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நேற்று கேரள மத்திய பகுதி ஐ.ஜி.பி. சந்தியூ தெரிவித்தார்.

இதற்கிடையில் பத்திரிக்கைகளின் பொய்ப் பிரச்சாரங்களைக் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரத்திற்க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: