புதன், 28 ஜூலை, 2010

கேரள முதலமைச்சரின் அறிக்கை ஒருதலைபட்சமானது: எதிர்க்கட்சித் தலைவர் உம்மன் சாண்டி

கோட்டயம்,ஜுலை27:கேரளாவில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் அச்சுதானந்தன் பேசும்போது, 20 ௦ஆண்டுகளுக்குள் கேரளாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறான அர்த்தமற்ற பேச்சுக்கு மாநிலம் மட்டுமின்றி நாடுமுழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதுகுறித்து கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் உம்மன்சாண்டி கூறும்போது; "குற்றம் செய்தவர் யார் என்றே தெரியாத நிலையில், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இப்படி பொறுப்பற்ற கருத்துக்களை,மாநிலத்தின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவர் கூறுவது தகுதியானதல்ல.

மேலும் ஒட்டு மொத்த நாடும் ஒரே அணியாக இணைந்து தீவிரவாதத்தை எதிர்க்கும் நேரத்தில் முதலமைச்சரின் அறிக்கை,மாநிலத்தின் கலாச்சார இணக்கத்தை தகர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது." என்றார்.

கருத்துகள் இல்லை: