புதன், 14 ஜூலை, 2010

கொந்தளிக்கும் காஷ்மீர்: மறைக்கப்படும் உண்மைகள்

2010. காஷ்மீரைப் பொறுத் தவரை மக்களுக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக வாலிபர்களை கொல்லும் ஆண்டாக அமைந்துள்ளது. ஜன வரி 2010 முதல் ஜூன் 30 வரை 16 சிறுவர்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள் ளார்கள். இது போன்ற சம்பவங் கள் மீண்டும் மீண்டும் நடை பெறும் போது மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். இது போன்ற படுகொலைகளை பொது மக்கள் இன அழிவு என்றே கருதுகிறார்கள்.
இனாயத் கான்

இராணுவத்தின் பைத்தியக்கார நடவடிக்கைக்கு இந்த ஆண்டு முதலில் ஜனவரி 8 அன்று பலி யானது இனாயத் கான் என்ற 16 வயது சிறுவன். இனாயத் அப்போது தான் பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருந்தான். அந்த சோக தினத்தன்று டியூசன் படிப்பதற்காக சென்றுக் கொண்டிருந்த இனா யத் கான் ஸ்ரீநகரில் உள்ள புது ஷாஹ் சௌக்கில், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல் லப்பட்டான். இனாயத்தின் வீடு இசைத்துறையைச் சேர்ந்த இன் னொரு இனாயத்தின் வீட்டின் அருகே உள்ளது. இந்த இனாயத்தும் 2006ல் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது இருவரும் நீதிக்காக உலகை விட்டு மறைந்த நிலையில் காத்திருக்கிறார்கள்.

வாமிக் பாரூக்

ஜனவரி 31, 2010 அன்று கனி நினைவு விளையாட்டரங்கில் விளையாடிக் கொண்டிருந்தான் ரைனாவாரி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் வாமிக் பாரூக். போராட்டக்காரர்கள் சிலரை விரட் டிக் கொண்டு வந்த பாதுகாப்பு படையினர் விளையாட்டரங்கில் நுழைந்து கண்ணீர்புகை குண்டு பிரயோகம் செய்தனர். படையின ருக்கு அருகில் இருந்த வாமிக் இதில் கொல்லப்பட்டான். அறி வார்ந்த மாணவனாகவும், தனது பெற்றோரின் நம்பிக்கை நட்சத் திரமாகவும் வாமிக் திகழ்ந்தான்.

ஜாஹித் பாரூக்

ஐந்து நாட்கள் கழித்து பிப்ர வரி 5, 2010 அன்று தனது பெற் றோருக்கு ஒரே மகனாக இருந்த 16 வயது சிறுவன் ஜாஹித் பாரூக் படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டான்.

ஏப்ரல் 13, 2010&ல் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் ஜுபைர் அஹ்மது பட் என்ற 17 வயது பையன் தனது நண்பர்களுடன் ஜீலம் ஆற்றங்கரையில் அமர்ந்து பொழுது போக்கிக் கொண்டிரு ந்தான். அப்போது அங்கே வந்த படையினர் இந்த சிறுவர்களை விரட்டி ஆற்றில் விழ வைத்தனர். ஜுபைரின் நண்பர் நீந்தி மறு கரையை அடைந்து விட்டார். ஆனால் ஜுபைரினால் நீந்த இயல வில்லை. சில படகோட்டிகள் ஜுபைருக்கு உதவ முன்வந்தனர். ஆனால் படையினர் அவர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டை வீசினர். ஜுபைர் ஆற்றில் மூழ்கி இறந்து போனான். சோப்பூரைச் சேர்ந்த மாணவனான ஜுபைர் ஸ்ரீநகரில் பகுதி நேர தொழிலா ளியாகவும் பணியாற்றி வந்தான். நேரடி சாட்சிகளின் வாக்குமூலங் களைப் புறக்கணித்து விட்டு இதனை ஒரு விபத்து என்று வர் ணித்து இந்த வழக்கை காவல்துறை மூடி விட்டது.

ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு 2010ல் மிகவும் அச்சத்திற்குரிய மாதமாக 2010&ல் ஜூன் மாதம் அமைந்து விட்டது. பெரும்பாலான மக்கள் அரசின் நீதி பரிபாலனத்தின் மீதான நம்பிக்கை இழக்கும் வகை யில் இந்த மாத நிகழ்வுகள் அமை ந்து விட்டன.

துபைல் அஹ்மது

17வயது சிறுவன் துபைல் அஹ்மது ஸ்ரீநகர் சாதாகடல் பகுதி யைச் சேர்ந்தவன். சமீபத்தில் தான் பள்ளி இறுதித் தேர்வில் மிக அதிக பட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைந்திருந்தான். கனி நினைவு விளையாட்டரங்கில் ஜுன் 5 அன்று விளையாடிக் கொண்டிருந்த துபைல் அஹ்மது படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். தலை யில் சுடப்பட்டதால் துபைல் அஹ்ம தின் மூளை சிதறி புல்வெளியில் விழுந்தது.

ரபீக் பங்ரூ

முஹம்மது ரபீக் பங்ரூவின் குடும்பத்தைச் சேர்ந்த ஏழு உறுப் பினர்கள் ஏற்கெனவே படையி னரால் கொல்லப்பட்ட நிலையில் துப்பட்டி நெசவாளரான இவரும் படையினரால் சித்தரவதைச் செய் யப்பட்டு கொல்லப் பட்டார். ஜூன் 19 அன்று இராணுவத் தினரால் பிடிக்கப்பட்ட ரபீக் கடுமையாக சித்தரவதைச் செய்யப்பட்டு உயிர் இழந்தார். மறுநாள் இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்ற போது அரசுக்கு எதிராக முழக் கங்கள் எழுப்பப்பட்டதினால் படையினரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ரபீக் பங்ரூவின் உறவினர் 17வயது ஜாவித் அஹ்மது மல்லா கொல் லப்பட்டார். குடும்ப வறுமையின் காரணமாக ஒரு பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான் ஜாவித் அஹ்மது.

சக்கீல் அஹ்மது

இந்த சோகத்தில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்பு ஜூன் 25 அன்று நிலவரம் மேலும் மோசமாகியது. வடகாஷ்மீரில் சோப்பூர் பகுதி யில் படையினர் ஒரு போலி மோதல் சாவை ஏற்படுத்தினர். இதனை எதிர்த்து மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்திய போது படையினர் கண்மூடித்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு சாகுபடி செய்து கொண்டிருந்த 17வயது சிறுவன் அஹ்மது காக்ரூவை படையினர் சுட்டுக் கொன்றனர். இதே தினத் தில் சில மின்பொருட்களை வாங்க கடைக்கு சென்று கொ ண்டிருந்த எலெக்ட்ரிசியன் சக்கீல் அஹ்மதையும் பாதுகாப்பு படை யினர் சுட்டுக் கொன்றனர்.

பிலால் அஹ்மது

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கொலைகளை கண்டித்து சோப்பூர் மக்கள் வீதிக்கு வந்து ஜூன் 27 அன்று போராட்டம் நடத் தினார்கள். 22 வயது வாலிபர் பிலால் அஹ்மது தொலைவில் இருந்து ஒரு கண்டன ஊர்வலத் தைப் பார்த்துக் கொண்டிருந் தார். அப்போது அங்கு வந்த படையினர் பிலால் அஹ்மதின் தொண்டைக்குழிக்குள் சுட அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந் தார்.

தவ்கீர் அஹ்மது மற்றும் தஜாமுல் பஷீர்

ஜூன் 28 அன்று வடகாஷ்மீரில் இருந்து தெற்கு காஷ்மீரில் உள்ள பாரமுல்லாவிற்கு படையினரின் கொலைவெறி பரவியது. 9 வயது சிறுவன் தவ்கீர் அஹ்மது மற்றும் 20 வயது தஜாமுல் பஷீர் ஆகியோர் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உயிர் இழந்த ஒருவரது குடும் பத்தினருக்கு சொந்தமான புல்த ரையில் இஸ்தியாக் அஹ்மது காந்தே (வ 15), இம்தியாஸ் அஹ்மது இட்டூ (வ 18), சஜ்ஜாத் அஷ்ரப் பாபா (வ 19), ஜூன் 29 அன்று பேசிக் கொண்டிருந்தனர். இஸ்லாமாபாத் நகரில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தவர்களை விரட்டிக் கொண்டு வந்த காவல்துறை ஆய்வாளர்கள் அய்யூப் ராத்தர் மற்றும் ரவூப் அஹ்மது ஆகியோர் உதவி ஆய்வாளர்கள் மஸ்ரத் ஆலம் மற்றும் பர்வேஸ் அஹ்மது ஆகியோருடன் புல் தரைக்குள் நுழைந்தார். அங்கிருந்த ஆறு வாலிபர்களை வரிசையாக நிறுத்தி வைத்து அவர்களை நோக்கி சுட் டதாக சொல்லப்படுகின்றது. இதில் இஸ்தியாக் அஹ்மதும் இம்தியாஸ் அஹ்மதும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். சுஜாத் இஸ் லாம் (வயது 19) மற்றும் மூவர் ஆனந்தநாக்கில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் சுஜாத் இஸ்லாம் உயிர் இழந்தார். மேலும் ஒருவரது நிலை மிக மோசமாக உள்ளது. மற்ற இருவர் ஆபத்தான நிலையைக் கடந்து விட்டனர்.

காஷ்மீரில் வாழ்வது ஒவ்வொரு மணி நேரமும் வேறுபட்ட அனு பவங்களை அளிக்கின்றது. ஊர டங்கு உத்தரவின் காரணமாக மக் கள் வீட்டிற்குள் அடைந்து கிடக் கின்றனர். மாநில அரசு முழு மையாக தனது சொந்த மக்களை வெறுத்து வருகின்றது. தங்கள் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் கோபமடைந்துள்ள ஆயு தம் தரிக்காத மக்கள் தொடர்ந்து போராடுவார்களா? இன்னும் எத்தனை பேர் கொல்லப்படுவ தற்காக காத்திருக்க வேண்டும்?

(கட்டுரையாசிரியர் இன்ஷா மாலிக் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து வரும் மாணவர் ஆவார்)

கருத்துகள் இல்லை: