
இவர்கள் திருமணம் செய்து கொள்ள அந்நாட்டு அரசியல் சட்டம் இடம் தராத நிலையில் இருவரும் அதிகாரபூர்வமின்றி ஒன்றாக வாழ்ந்தனர்.இந் நிலையில், கடந்த 12ம் தேதி ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஐஸ்லாந்து நாடாளுமன்றம் அனுமதி தந்து சட்டம் இயற்றியது.இதையடுத்து நேற்று பிரதமரும் அந்தப் பெண்ணும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர்.தனது 50வது வயதில் கணவரைப் பிரிந்த ஜோகன்னா அதன் பின்னர் தோழி ஜோனினாவுடன் வாழ ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்போதைய திருமணம் மூலம் உலகிலேயே முதல் ஓரின சேர்க்கை பிரதமர் என்ற பெயரை ஜோகன்னா பெற்றுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக