செவ்வாய், 27 ஜூலை, 2010

காஸா மீதான தடை நீக்கக் கோரும் குழுவுடன் சேரும் இந்தியக் கப்பல்!

காஸா மீதான இஸ்ரேலின் தடைகளை நீக்க வலியுறுத்தி புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பன்னாட்டுக் குழுவுடன் இந்தியக் கப்பல் ஒன்றும் இணைகிறது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் விதித்துள்ள சமூக மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று உலக நாடுகள் முழுவதும் பரவலாக எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் "விடுதலை அணிக்கப்பல்" என்ற பெயரில் உணவு மருந்தும் மருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு காஸாவை நோக்கி கப்பல் ஒன்று சென்றது. இதில் சென்ற ஊழியர்கள் 9 பேரை இஸ்ரேல் தாக்கிக் கொலை செய்தது.

இந்நிலையில் காஸா மீதான தடைகளை நீக்க வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதிய புத்தகமான “The Audacity of Hope” (உறுதியான நம்பிக்கை) என்ற பெயரில் மீண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காஸா மீது இஸ்ரேல் விதித்துள்ள கடல் மார்க்கத் தடைகளை தகர்க்கும் விதமாக ஐரோப்பா, கனடா, தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் காஸா கடற்கரையைச் சென்றடைய இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதும் இந்த முயற்சிக்கு ஆதரவு பெருகி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: