வியாழன், 15 ஜூலை, 2010

தமிழக மந்திரி பழனிசாமியிடம், சிறைத்துறை டி.ஐ.ஜி. யிடம் த மு மு க, ம ம க, மனு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில மாநில செயலாளர் கோவை இ உம்மர் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர் உள்ளிட்ட 10 பேர் தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலுர் பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார். அதில் அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு மாற்ற வேண்டும் என கூறி இருந்தனர். மற்ற விபரங்களை கேட்ட அமைச்சர் நான் தமிழக முதல்அமைச்சர், சட்ட துறை அமைச்சர், கலந்து பேசிவிட்டு உங்களுக்கு நல்ல முடிவு சொல்லுகிறேன், பிறகு கோவை மத்திய சிறையில் உள்ள சிறைத்துறை துனைதலைவர் கோவிந்தராஜை சந்தித்து மனு அளித்தார். சந்தித்து விட்டு வெளியே வந்த தமுமுக மாநில செயலாளர் உம்மர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அன்சாரிக்கு இருதய நோய் நீரிழிவு நோய் உள்ளது. கைக்குழந்தைகளும் உள்ளது. அவரை எந்த வித முன் அறிவிப்பு இன்றி சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றி உள்ளனர். இங்கிருந்தால் அவரது மனைவி உறவினர்கள் சென்று பார்க்க வசதியாக இருக்கும் எனவே மனிதாபிமான அடிப்படையில் அன்சாரியை மீண்டும் கோவை ஜெயிலுக்கு கொண்டு வர வேண்டும், எங்கள் அமைப்பின் நிர்வாக குழு கூட்டம் 14 ம்தேதி நடக்க இருக்கிறது கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


பேட்டியின் போது சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகி கோவை தங்கப்பா, தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் பஷிர்,துனைதலைவர் பர்கத்துல்லாஹ், செயலாளர் ரபிக், பொருளாளர் அகமது கபீர், அதுபோல் மமக மாவட்ட செயலாளர் சுல்தான் அமீர், துனைசெயலாளர்கள் அப்பாஸ், ஷாஜகான், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், இளைஞர் அணி செயலாளர் அக் ஷியா நிசார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

செய்தி புகைப்படம்: மீடியா வாயஸ்

கருத்துகள் இல்லை: