புதன், 7 ஜூலை, 2010

ஏ.டி.எஸ். முந்திக் கொண்டதால் சி.பி.ஐ. க்கு பின்னடைவு!

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பின் முக்கிய ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோரை அவசரப்பட்டு கைது செய்யாமல் அவர்களின் அசைவுகளை வைத்து மற்ற பிரதான தீவிரவாதிகளான ராமச்சந்திர கல்சங்கரா மன்றும் சந்தீப் டாங்கே ஆகியோரை உன்னிப்பாக சி.பி.ஐ., கவனித்து வந்த நிலையில், ராஜஸ்தான் ஏ.டி.எஸ். முந்திக்கொண்டு குப்தா மற்றும் சர்மாவை கைது செய்தது, சி.பி.ஐ. திட்டங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

இதனால் தலைமறைவாக உள்ள மற்ற தீவிரவாதிகளை பிடிக்க முடியாமல் இன்று வரை சி.பி.ஐ மற்றும் ஏ.டி.எஸ். திணறி வருகிறது. இவர்கள் ஜூன் 2009 லிருந்தே சி.பி.ஐ. மற்றும் ஏ.டி.எஸ். கண்காணிப்பில் இருந்தவர்கள்.

இன்னும் சிறிது நேரம் பொறுத்திருந்தால் தீவிரவாதத் தாக்குதல் பின்னணிகள் உட்பட பல புதிர்கள் வெளிவந்திருக்கும்.

ராஜஸ்தானில் புதிதாக பதிவியேற்ற காங்கிரஸ் அரசின் நெருக்கடியில் இவர்கள் கைது செய்யப்பட்டார்களா? அல்லது ஏ.டி.எஸ். ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நிலையில், வழக்கின் முன்னேற்றத்தை நிரூபிப்பதற்கு ஒரு ஆர்வக் கோளாறில் கைது செய்யப்பட்டார்களா? என்பது தெரியவில்லை.

இவர்களின் அவசரக் கைது அனைவரையும் இருட்டில் துலாவவிட்டுள்ளது. குறிப்பாக, ராம்ஜி கல்சங்கரா. இவன் ஆறுக்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளில் தேடப்படுபவன். இவன் சிக்கினால், அனைத்து பின்னணிகளும் வெளிச்சத்திற்கு வரும்!
TOI

கருத்துகள் இல்லை: