திங்கள், 26 ஜூலை, 2010

உண்மையில் யார் தீவிரவாதிகள்?

இசுலாமியர்கள் மத அடிப்படைவாதிகள் என்ற கருத்தை ஒரு குற்றசாட்டாக வைப்பது சங்பரிவார கூட்டங்களின் பொழுதுபோக்கு. உண்மையில் இசுலாமியர்கள் அதை ஒரு பொருட்டாக கருதுவதில்லை! எப்படியும் வாழலாம் என்ற இந்த கலி உலகத்தில் இப்படிதான் வாழவேண்டும் என்பது தான் இசுலாமியர்களின் அடிப்படை. மேலும் அவர்கள் ஒவ்வொருவரும் தம்மை மத அடிப்படைவாதி என்று கூறி கொள்வதில் பெருமிதம் அடைகிறார்கள்.

பெரும்பாலான அச்சி மற்றும் சில காட்சி ஊடகங்களால் இசுலாமியர்கள் தீவிரவாதியாக சித்தரிக்கபட்டாலும், ஊடகங்களின் கண்மூடித்தனமான இந்த கருத்தை எதிர்கொள்ள முடியாமல் இசுலாமிய சமுதாயம் தினறிக்கொண்டு இருக்கும் அதே வேளையில் தமுமுக போன்ற மனிதாபிமானம் நிறைந்த இயக்கங்களால், குருதி (இரத்தம்) தானம், சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர் நேரங்களில் ராணுவத்தை விட முதலாய் வந்து நிவாரண உதவிகள், ஆம்புலன்ஸ் சேவை ஆகியவைகள் தன்னலம் பாராது செய்யபடுகிறது.

இப்படியாக சேவைகளின் மூலம் இந்து நடுநிலைவாதிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் நன் மதிப்பை பெறுவதுடன், உண்மையில் இசுலாமியர்கள் அனைவரும் ஊடகங்கள் சித்தரிப்பது போல தீவிரவாதிகள் அல்ல என உணர்த்துகிறது தமுமுக போன்ற இயக்கங்கள்.

கல்நெஞ்சம் கொண்ட குருமதி காவிக்கூட்டம் (சங்பரிவார கூட்டங்கள்) தமுமுக தன்னலம் பாராது செய்யும் தொண்டுகளை கண்டு விரக்தி அடைந்து, நேற்று தமுமுக-வின் அம்புலன்சுகளில் ஒன்றை திருத்துறைபூண்டியில் நாசப்படுத்தி இருக்கிறார்கள்!

உண்மையில் யார் தீவிரவாதிகள்? பொதுமக்கள் சேவைக்காக ஆம்புலன்ஸ் வாங்கிட பல இசுலாமிய சகோதரர்கள் பணம் கொடுத்தார்களே, அவர்கள் தீவிரவாதிகளா? அதை அடித்து நொறுக்கியவர்கள் தீவிரவாதிகளா?

உயர் அமைச்சர் பதவில் அமர்ந்துள்ள தேச துரோகிகள், என்கவுன்ட்டர் என்ற பெயரில் குஜராத்திலும், காஷ்மீரிலும் அப்பாவி மக்களை கொன்று குவிப்பவர்கள் தீவிரவாதிகளா? செத்து மடிபவர்கள் தீவிரவாதிகளா?

thanks to :