புதன், 7 ஜூலை, 2010

ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு – விரைவில் புதிய கைதுகள்!

அஹ்மதாபாத்:ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில், ஒரு மூத்த அரசியல்வாதியும், 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் மிக விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

மூத்த அரசியல்வாதியின் பங்கினை நிரூபிக்கும் வகையில் பல ஆதாரங்களை சி.பி.ஐ. திரட்டியுள்ளது.

ஆதாரங்களை சேதப்படுத்தியதற்காக மற்ற இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.

அனைத்து ஆதாரங்களும் சி.பி.ஐ.யின் தலைமையைக் கொண்ட டெல்லிக்கு அனுப்பப்பட்டு, கைதுக்காண ஒப்புதல்களும் வாங்கப்பட்டுள்ளது.

எனினும், அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க ரதயாத்திரை முடியும் வரை சி.பி.ஐ காத்திருக்க முடிவுசெய்துள்ளது.

ஜூலை 13ம் தேதியன்று யாத்திரை முடிந்த உடனேயே ஓரிரு நாட்களில் இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source:mumbaimirror

கருத்துகள் இல்லை: