வியாழன், 1 ஜூலை, 2010

மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பஜார் திடலில் 27.06.2010 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு ம.ம.க மாவட்டப் பொருளாளர் ரசூல் மைதீன் தலைமை வகித்தார். பகுதிச் செயலாளர் காஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, மாநில துணைச் செயலாளர் காதர் மைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ம.ம.க மாவட்டச் செயலாளர் மைதீன் சேட்கான், தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், மாவட்டச் செயலாளர் உஸ்மான் கான், மாவட்டப் பொருளாளர் புளியங்குடி செய்யதலி, துணைத் தலைவர் சர்தார் அலிக்கான், ம.ம.க துணைச் செயலாளர் நெயினார், சுல்தான் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். பகுதி பொருளாளர் ரப்பானி நன்றியுரை கூறினார்.

நகர தமுமுக தலைவர் கே.எஸ். காசிம் பிர்தௌஸி துவக்க உரையாற்றினார். அப்பாஸ் ஹில்மி திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார். நகர தமுமுக செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் அப்துல் அஜிஸ், நகர துணை தலைவர் அப்துல் வாஹித், பாதுஷா, மகபூப் ஜான், ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் பொதுக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை: