வியாழன், 15 ஜூலை, 2010

தமிழக அரசின் திட்டத்தால் உருது பேசும் மக்கள் கொந்தளிப்பு!

மெமொரியல் ஹாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மெமொரியல் ஹாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சமச்சீர் கல்வி, கட்டாய மொழிச்சட்டம் போன்ற தமிழக அரசின் திட்டங்கள், உருது பேசும் சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட மொழிச் சிறுபான் மையினரை பெரும் கொந்தளிப் புக்குள்ளாக்கியுள்ளது.
சமச்சீர் கல்வி குறித்து முத்து குமரன் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளில் ஒரே வகையான பாடத்திட்டம் என்பதை மட்டும் அரசு எடுத்துக்கொண்டு, உள்கட் டமைப்பு உள்ளிட்ட பல பரிந்து ரைகளை அனாதையாக விட்டு விட்டது.

பள்ளிகளில் பாகம் 1 (Part-1) எனப்படும் மொழிப்பாடத்தில் தமிழ், அல்லது அரபி, உருது, மலையாளம், கன்னடம். ஆகிய மொழிகளைப் படிக்கும் வாய்ப்பு இது வரை இருந்து வந்தது.

தமிழக அரசின் புதிய திட்டத்தில் பாகம்-1 தமிழ் மட்டுமே படிக்க முடியும், உருது, அரபி, மலையாளம் உள்ளிட்ட பிறமொழிகளைப் படி க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

பாகம்-1

மொழிப்பாடத்தின் நோக்கமே மாணவர்களுக்கு அவர்களின் தாய் மொழியை நன்கு பயிற்றுவிப்பது தான்.

உருது, மலையாளம், கன்னடம் இவற்றைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், தாய்மொழி கற்ப தற்கு இருந்த வாய்ப்பைப் பறித்து, தமிழக அரசு தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கியுள்ளதால், மக்கள் பெரும் அதிர்ச்சியும், கொந்தளிப் பும் அடைந்துள்ளனர்.

“தமிழகத்தில் வசித்துக் கொண்டு தமிழ் படிக்க மாட்டோம் என்று நாங்கள் மறுக்கவில்லை. மாறாக தாய்மொழியின் வாய்ப்பைப்பறிப் பது தான் எங்களுக்கு சங்க டமாக உள்ளது. நாங்கள் தமிழை 4&ம் பாகமாக (Part-4) படிக்கத் தயாராக இருக்கிறோம்” என்கின்ற மொழிச் சிறுபான்மையினரின் குரலை எதிரொலித்தார் பேராசிரியர் அபுல்ஃ பாசல். மொழிச் சிறுபான் மையினரின் உரிமையை அரசியல் சாசனத்தின் 28, பிரிவுகள் உறுதி செய்திருக்க, தமிழக அரசு எடுத் துள்ள தடாலடி முடிவு மொழிச் சிறுபான்மையினரை அதிர வைத் துள்ளது.

மொழிச்சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் அரசிடம் தங்கள் பிரச்சினைகளை முன் வைத்தும் செவி சாய்க்கப்படவில்லை. இப் பிரச்சினை குறித்து கலந்தாய்வு நடத்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணி பார்ப்பியா மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டக் கூட்டத்தில் அனைத்து முஸ்லிம் அமைப் புகளின் பிரதிநிதிகள், அரசு தலைமை காஜி, ஷியா பிரிவு காஜி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

த.மு.மு.க சார்பில் கலந்து கொண்ட மாநிலச் செயலாளர் பேரா.ஹாஜாகனி மொழிச் சிறுபா ன்மையினர் மாநில மொழியா னத் தமிழை ஒரு பாடமாகப் படிக்க முன் வந்துள்ளபோது, அவர் களின் தாய்மொழியைப் படிக்கிற வாய்ப்பைத் தடுப்பது தவறானது, என்ற த.மு.மு.கவின் நிலைபாட்டை எடுத்துரைத்தார்.
பள்ளிகளில் உருது, அரபி, ஆகியன தாய் மொழிகளாய் பயில முடியா தெனில், கல்லூரி களிலும் பயில முடியாது. காலப் போக்கில் அரபி, உருது, ஆகிய மொழித்துறைகளை இழுத்து மூடுவதற்கு அரசின் திட்டம் அடி கோலியுள்ளது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்து, இந்தி, இந்தியா என்ற கொள்கையைக் கொண்ட சங்பரி வார கும்பல் உருது மொழியை ஒழித்துக்கட்ட சகல சதிகளையும் செய்தனர்.



மெமொரியல் ஹாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மெமொரியல் ஹாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

அல்லாமா இக்பாலின், சாரே ஜஹான்சே அச்சா, இந்தியாவின் தேசிய கீதமாக ஆகிவிடாமல் தடுத்தனர்.

இந்திப் படங்களில் உருது, வசனங்கள், பாடல்கள் வரக்கூ டாது என பால்தாக்கரே கும்பல் கலவரம் செய்தது.

உருதுவை மெல்ல நசுக்கி, ஒடுக்கும் வேலைகளை ஆரிய சக்திகள் செய்தபோது, திராவிட இயக்கங்கள் தான் மொழிச் சிறுபான்மையினருக்கு நிழல் கொ டுத்தன. இப்போது பா.ஜ.க செய்ய வேண்டிய வேலையை திமுக அரசு செய்திருப்பது மொழிச் சிறுபான்மையினரைப் பெரிதும் வேதனைபடுத்தியுள்ளது.

தி.மு.க அரசு மொழிச் சிறுபான்மையினரின் நியாயம் உணர்ந்து, காயம் அறிந்து மருந்து போடப் போகிறதா இல்லை மருத்துவம் செய்ய மறுத்துவிட்டு, வரும் தேர்தலில் காயப்படப்போகிறதா? பொறுத்திருப்போம்.

கருத்துகள் இல்லை: