ஞாயிறு, 25 ஜூலை, 2010

கொடூரன்!படுபாவி!இவனை என்ன செய்யலாம்!

நரபலி கொடுக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது: கைதான மந்திரவாதி வாக்குமூலம்
ராமநாதபுரம், ஜூலை. 25-மதுரை அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் என்ற பகுதியை சேர்ந்தவர் கவுஸ் பாட்சா. இவரது மனைவி பெயர் சிரின் பாத்திமா. இவர்களுக்கு காதர் யூசுப் என்று 1 1/2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுஸ்பாட்சா விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் கணவனை இழந்து மனநிம்மதி இன்றி தவித்து வந்த சிரின் பாத்திமா ஆறுதலுக்காக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவுக்கு குழந்தையுடன் வந்து தங்கி இருந்தார்.

அந்த தர்காவில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் கபூர் என்ற மந்திரவாதி தனது இரண்டாவது மனைவி ரமலாபீவியுடன் தங்கி இருந்தார். அப்போது சிரின் பாத்திமாவுடன் பழக்கம் ஏற்பட்டு அவரது கதையை தெரிந்து கொண்டு ஆறுதல் கூறுவதுபோல் நடித்தார்.

காதர் யூசுப்பை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென இந்த குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்து விட்டால் தனது மந்திர சக்தி அதிகரிக்கும் என்று நம்பினான்.

எனவே காதர் யூசுப்பை கடத்தி நரபலி கொடுக்க முடிவு செய்தான். தர்காவில் அனைவரும் அசந்து தூங்கி கொண்டிருக்கும்போது அப்துல்கபூரும், ரமலா பீவியும் சேர்ந்து குழந்தை காதர் யூசுப்பை நைசாக கடத்தி சென்று விட்டனர். மறுநாள் காலையில் கண்விழித்து பார்த்த சிரின் பாத்திமா தனது குழந்தை காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார்.

இது குறித்து மதுரை தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னுடன் பழகிய காயல் பட்டிணம் அப்துல் கபூர், அவரது மனைவி ரமலா பீவி ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். தல்லாகுளம் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்துல் கபூரும், ரமலாபீவியும் சேர்ந்து குழந்தையை கடத்தி நரபலி கொடுத்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காயல்பட்டிணம் சென்ற போலீசார் அப்துல் கபூரையும், ரமலாபீவியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை கடத்தி நரபலி கொடுத்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து குழந்தையை எப்படி கொலை செய்தோம்? உடலை எங்கு புதைத்தோம்? என்பதையும் அவர்கள் கூறினர்.

குழந்தையை கொன்று ரத்தத்தை குடித்தால் மந்திரசக்தி அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையில் இந்த கொலையை செய்து விட்டதாக அப்துல்கபூர் போலீசாரிடம் தெரிவித்தான். அதாவது குழந்தையை கடத்தி கொண்டு முதலில் ஏரல் கிராமத்திற்கு சென்ற அவர்கள் அங்கு அதை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து ஒரு பெரிய தூக்கு வாளியில் அடைத்து உள்ளனர்.

பின்னர் குழந்தையின் உடலில் இருந்து சேகரித்த ரத்தத்தையும், தலை பகுதியையும் குலசேகரன்பட்டிணம் செல்லும் வழியில் உள்ள கல்லாமொழி கடற்கரைக்கு கொண்டு சென்றனர். அப்துல்கபூர் அங்கு அந்த குழந்தையின் ரத்தத்தை குடித்து விட்டு தலையை கல்லாமொழி கடற்கரையில் புதைத்துள்ளான். உடல் பாகங்களை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள காட்டுப்பள்ளியில் கொண்டு வந்து புதைத்தான். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தல்லாகுளம் போலீசார் குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அப்துல்கபூரையும், ரமலா பீவியையும் கொண்டு வந்தனர். அங்கு குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டினர். இதைத் தொடர்ந்து போலீசார் கல்லாமொழி கிராமத்திற்கு சென்று அங்கு புதைக்கப்பட்டுள்ள தலையை தோண்டி எடுக்கிறார்கள்.

அதன் பிறகு ஏர்வாடிக்கு வந்து உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து உடல்களை மீட்கிறார்கள். அதன் பிறகு பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளார்கள். கடலாடி தாசில்தார் காளிமுத்து, கீழக்கரை போலீஸ்டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ் பெக்டர் சங்கு ஆகியோர் முன்னிலையில் ஏர்வாடியில் இன்று குழந்தை காதர் யூசுப்பின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.

அப்துல்கபூருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் மனைவியும் குழந்தைகளும் பிரிந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் தான் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த ரமலா பீவியுடன் அப்துல்கபூருக்கு பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது மனைவியாக்கி கொண்டார். இவர்கள் இருவரும் ஊர் ஊராக தர்காவுக்கு சென்று அடிக்கடி மொட்டை போட்டு மாந்திரீக வேலைகளை செய்து வந்துள்ளனர். மந்திர சக்தி அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த கொடூர கொலையை செய்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: