புதன், 28 ஜூலை, 2010

9/11 நினைவு தினத்தில் திருக்குர்ஆனை எரிக்க திட்டமிட்டுள்ள அமெரிக்க தேவாலயம்

ஃப்ளோரிடா,ஜூலை27:"நோ ஹோமோ மேயர்" என்ற போராட்டத்தை நடத்திய ஃப்ளோரிடா மேற்கு போரோ பாபிஸ்ட் தேவாலயம், தற்போது 'சர்வதேச குர்ஆன் எரிப்பு தினம்’ (நவூதுபில்லாஹ்) என்ற பெயரில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 9ம் ஆண்டை அனுசரிக்க திட்டமிட்டுள்ளது.

அத்தேவாலய பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறுகையில் "இஸ்லாம் மதம் தீங்கானது, வன்முறைகளை தூண்டும் கொடுங்கோன்மையுடையது, எனினும் தன்னை அமைதியான மதம் என்ற முகமூடியுடன்,சமுதாயத்திற்கு தவறான வழியை காட்டுகிறது" என்று கூறினார்.

தேவாலய மைதானத்தில் இஸ்லாம் மதம் பிசாசுகளால் ஆனது என்றும் சர்ச்சைக்குறிய வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

"நியூயார்க் தாக்குதலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்திலும், இஸ்லாத்தின் தீங்கை எதிர்க்கும் விதத்திலும்,இஸ்லாமிய சமயத்தின் புனித குர்ஆனை 9/11 அன்று மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை எரிக்க திட்டமிட்டுள்ளோம்." என்றும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாதிரியார் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;"இப்போதுள்ள சூழலில் இஸ்லாத்தின் வளர்ச்சி மிக பிரம்மாண்டமாக உள்ளது,அதனாலயே நாங்கள் இத்திட்டத்தை வெளியிட்டோம்" என்பதாகத் தெரிவித்தார்.

"இஸ்லாம் ஒரு வன்முறையான, கொடுமையான மதம், பைபிளில் உள்ள உண்மைக்கு முன் அதனால் எதுவும் செய்ய முடியாது! இயேசுவே ஒரே வழி என்ற செய்தியை இதன் மூலம் நாங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம்" என்றும் தெரிவித்தார்.

இதற்காக ஃபேஸ்புக்கில் ஒரு குழுமம் அமைக்கப்பட்டு பலரும் ஆதரித்த வண்ணம் இயங்கிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது.

முன்னதாக இதே ஃபேஸ்புக்கில் தொடங்கப்பட்ட "எல்லோரும் முஹம்மதை வரைவோம்." என்ற திட்டம் உலகெங்கிலும் பலத்த எதிர்ப்பை சம்பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது..

கருத்துகள் இல்லை: