புதன், 18 மார்ச், 2009

மனிதநேய மக்கள் கட்சி எந்த கூட்டணியில்…?

மனிதநேய மக்கள் கட்சி அரசியல் களத்தில் புதிய குழந்தை என்பது யாவரும் அறிவர். ஆனால், அக்குழந்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செய்தியாளர்கள் நாள்தோறும் இன்று யாருடன் கூட்டணி பேசினீர்கள்? என விசாரிக்கிறார்கள்.


வாரமிருமுறை இதழ்களும், வார இதழ்களும் அரசியல் செய்திகளில் தவறாமல் மனிதநேய மக்கள் கட்சி யின் நிகழ்வுகளை குறிப்பிடத் தவறுவ தில்லை
அனைவருக்கும் வாசலை திறந்து வைத்திருக்கிறோம் என ம.ம.க. தலைமையகம் அறிவிததால் பல தரப்பலிருந்தும் போட்டா போட்டி நலன் விசாரிப்புகள் தொடர்கிறது.
முன்பெல்லாம் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கே ஒரு தொகுதி தந்தால் போதும் என பயந்து பயந்து பேரம் நடத்திய முஸ்லிம் கட்சிகள் ம.ம.க ஆறு நாடாளு மன்ற தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்ததும் நிமிர்ந்து பார்க்கிறார்கள் இப்போது அவர்களும் எங்களுக்கு இரண்டு அல்லது முன்று தொகுதிகள் வேண்டும் என பேரம் பேச தைரியம் பெற்றுள்ளார்கள்.
இந்நிலையில் உங்களுக்கு மூன்று தொகுதிகளாமே...?இரண்டு தொகுதி களும் ஒரு ராஜ்யசபாவு மாமே? இரண்டு தொகுதிகளும் ஒரு அமைச சர் பதவியுமாமே...? என்றெல்லாம் செய்திகள் ம.ம.க.வை சற்றி நிற்கின்றதுன.
இந்நிலையில் ம.ம.க அவசரப்படா மல் அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது. மேலப்பாளைத்தில் நடந்த முதல் தேர்தல் நிலை பொதுக்கூட்டத் தில் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அ­யும், சென்னை தம்புச் செட்டி தெரு பொதுக் கூட்டத்தில் பேசிய ம.ம.க துணைப் பொதுச் செயலாளர்

எம். தமிமுன் அன்சாரியும் தங்கள் உரையில் ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம் என தெளிவாக அறிவித்திருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: