சனி, 28 மார்ச், 2009

இன்னும் 2 நாட்களில் நல்ல முடிவு : ஜவாஹிருல்லாஹ் தகவல்


சென்னை: ''தொகுதி ஒதுக்கீட்டில் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்,'' என ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லாஹ் கூறினார். மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலர் அப்துல் சமது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொருளாளர் ரகமதுல்லா ஆகியோர் முதல்வர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

அதன்பின் ஜவாஹிருல்லாஹ் கூறுகையில், ''லோக்சபாத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு முதல்வரைச் சந்தித்தோம். ஒரு தொகுதி கொடுத்தால் ஏற்க மாட்டோம். எங்களது கோரிக்கையைக் கேட்ட முதல்வர், அதை கனிவுடன் பரிசீலிப்பதாகக் கூறினார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நல்ல முடிவு ஏற்படும்,'' என்றார்.

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை: