
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த 15.03.09 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் நிலை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு கே.ஏ. பழ்லுல் இலாஹி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ரசூல் மைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மமகவின் பொதுச் செயலாளர் அப்துஸ் சமது, தமுமுக மாநில துணைச் செயலாளர் மைதீன் சேட்கான், மமக மாவட்டச் செயலாளர் பாளை எஸ். ரபீக், தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் பாரூக், தமுமுக மாவட்டப் பொருளாளர் மிஸ்பாஹுல் ஹுதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தப் பொதுக் கூட்டத்தில் ஆயிரத்தி ஐநுôறுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக