சனி, 21 மார்ச், 2009

இறைவன் படைப்பில் பெண்

உலக மக்கள் தொகை 700 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்திய மக்கட் தொகை 1,02,70,15,247

இதில் ஆண்கள் 53,12,77,078 பெண்கள் 49,57,38,169

தமிழ்நாட்டு மக்கள் தொகை 6,21,10,839

இதில் ஆண்கள் 3,12,68,654 பெண்கள் 3,08,42,185.

ஆயிரம் ஆண்களுக்கு 986 பெண்கள்.

இப்படி ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

பெண்களைப் பெருமைப்படுத்த வேண்டும் அதுவும் தாய்மையோடு கண்ணியப்படுத்த வேண்டும் என்று உலகம் நினைத்த போது, சொந்த நாட்டை 'தாய்நாடு' என்றும், தான் பேசும் மொழியை 'தாய்மொழி' என்றும், தான் பிறந்த மண்ணை தாய் மண் என்றும், நாகரிகம் படித்துத் தந்த ஆறுகளுக்கெல்லாம் கங்கை, காவிரி, கோதையாறு .. இப்படி எல்லா ஆறுகளுக்கும் பெண்களின் பெயர் சூட்டி... கூடுமான வரை பெண்களை முற்படுத்தி கொண்டாடியது மனித வர்க்கம்.

"மகளிராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்" என்று ஒளவை என்கிற மாதரசியும் பாடி வைத்தார்.

ஆனால் முதல் பெண்ணின் படைப்பு ஆணின் எலும்பிலிருந்து உருவானது என்பதாக குர்ஆனிலிருந்து காணக் கிடைக்கிறது.

"பெண்கள் கோணல் எலும்பால் படைக்கப்பட்டவர்கள். எனவே அவர்களை அப்படியே வைத்து நுகருங்கள்! நிமிர்த்த முயன்றால் முறிந்து விடும்" என்று அண்ணல் நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள்.பெண்களிடம் காணும் இந்த பலகீனத்தை விஞ்ஞானத்தின் மூலம் அந்த வித்தியாசங்களை ஆய்வு செய்த துறைக்குப் பெயர் 'ஸோ ஷியோ பயாலஜி' என்கிற புதிய இயல், ஆண்-பெண் வேறுபாடே இன விருத்தியை உத்தேசித்துத்தான் ஏற்பட்டது என்று அடித்துச் சொல்கிறது.

பெண் கருப்பையிலிருக்கும் போதே இதற்குத் தயாரிக்கப்படுகிறாள். கர்ப்பமாகும் கணத்திலேயே ஆண் பெண் என்று பாகுபாடு ஏற்பட்டு விட அந்தப் பெண் கருவிலேயே சுமார் நாற்பதாயிரம் முட்டைகள் அப்பெண் கருவுக்குள்ளே இருக்கும் போது விதைக்கப்படுகின்றன. அவற்றில் சுமார் நானூறு அவள் வாழ்நாளில் முதிர்ச்சி பெறலாம். இப்படி பிறப்பிலிருந்தே பெண் என்பவளை இயற்கை, தாய் என்கிற நிலைக்கே தயார் செய்து அனுப்புகிறது.

சின்ன வயதில் அவள் ஒரு பையன் போலத்தான் வளர்கிறாள். அவளுடைய இன உறுப்புகளில் ஆரம்பத்தில் அத்தனை மாறுதல்கள் இல்லை. சிலசமயம் சின்ன பெண்கள் பையன்களை விட உயரமாகவும், திடமாகவும் இருப்பதைக் கவனித்திருக்கலாம்.

பருவம் வந்ததும்தான் அவளை இயற்கை ஆக்கிரமிக்கத் துவங்குகிறது. அவளுடைய ஓவரிக்கு அதிகப்படியான ரத்தம் பாய்ந்து பெரிதாகி அந்த முட்டைகளில் ஒன்று முதிர்ந்து அவளுடைய மாதாந்திர அவஸ்தைகள் துவங்குகிறது. உடம்பின் அமைப்பு மாறத் தொடங்குகிறது. எண்டாக்டரின் என்கிற சுரப்பிகளின் சாகசத்தால் நாற்பது, நாற்பத்தைந்து வயது வரைக்கும் 'பிள்ளை பெற்றுத்தா பிள்ளைப் பெற்றுத்தா!' என்று அவளுக்கு மாதாந்திர ரத்த ஞாபகங்கள்.

"மாதவிலக்குப் பற்றி (நபியே) உம்மிடம் அவர்கள் வினவுகின்றனர் நீர் கூறும்! அது (அசுத்தமான) ஓர் உபாதை. எனவே மாதவிடாய் காலத்தில் பெண்களை விட்டு விலகி, அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர்களை அணுகாதீர்கள்.அவர்கள் சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்".

இந்த மாதாந்திர சோர்வு, உபாதை.. இந்த உதிரம் இழக்கும் பிரச்சினை சுமார் 48 வயது வரை.... அப்புறமா 'மெனோபாஸ்' என்கிற முதிர்ந்த பருவம். இதற்குப்பிறகு குழந்தைப் பிறப்பு என்பது இயற்கையால் மறுக்கப்படுகிறது.

"(ஜகரிய்யாவாகிய அவர் இறைவனை நோக்கி) இறைவனே!எனக்கு எவ்வாறு சந்தததி உண்டாகும்? நிச்சயமாக நானோ முதுமையின் உச்சத்தை அடைந்து விட்டேன் என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள் என்றார்.''

ஆனாலும் அல்லாஹ் அவர்களுக்கு 'யஹ்யா' என்கிற ஆண் குழந்தையைக் கொடுத்தான்.பொதுவாக உலகலாவியளவில் புத்திரபாக்கியத்தை கணக்கெடுத்த போது தம்பதிகளில் ஆறில் ஒரு ஜோடிக்கு புத்திரப் பிராப்தம் கிடைப்பதில்லை என்கிறார்கள். இதற்குப் பல்வேறு காரணங்கள் ஆண்களில் சிலருக்கு 'அஜுஸ்பெர்மியா' என்ற திரவத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கையில் குறைவும் அல்லது இல்லாமையும் சாதாரணமான காரணங்;கள்.. பெண்களில் சிலருக்கு ஹைமன் என்னும் வாசல்மூடியே இருக்கலாம். அல்லது பாலோபியன் குழாய்கள், ஓவரிக்கள், போன்றவற்றின் குறைகளால் அவளால் முட்டை உண்டாக்க முடியாமை அல்லது உண்டாகி அதைச் சரியான வழியில் செலுத்த முடியாமை அல்லது அது கருவாகி அதை சரியாகக் கர்ப்பப்பைக்குள் செலுத்த முடியாமை போன்ற பல்வேறுபட்ட காரணங்கள் நிகழ்கின்றன.

பெரும்பாலும் மனத்தின் பிரமைகள், பயங்களாலேயே இந்தக் குறை ஏற்படுகிறது என்கிறார்கள். ஒரு நல்ல தெராபிஜஸ்ட், சைக்கியாட்ரிஸ்ட் போன்ற மனவள வல்லுநர்களால் சம்பந்தப்பட்ட குறைநீக்க முடியும்.

பெண்களின் குறைகள் பலவற்றை சிகிச்சை மூலம் நீக்க முடியும் 'கொனாடோட்ரபின்ஸ்' என்று சொல்லப்படும் இன உணர்;ச்சி ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கவல்ல விந்தையான மருந்துகளும் இருக்கின்றன. இதில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் முழுக்க முழுக்க தேர்ந்த டாக்டரின் மேற்பார்வையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாகி விட்டால் இரட்டை, மூன்று ஏன்... ஐந்து குழந்தைகள் கூட ஒரே பிரவசத்தில் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.அரச மரக்காற்றில் இந்த

'ட்ராபின்கள்' இருக்கின்றதாக இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை. எனவே அரசு மரத்தை சுற்றி வருவது பிரயோஜனமில்லை என்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.

பெண் ஆணை விட இருபது சதவீதம் எடைக்குறைவு. அவனைப் போல வேகமாக ஓடவோ தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும் சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை அதிகம். சின்ன வயதிலிருந்தே ஆணைவிட அவள் அதிகம் புன்னகை செய்கிறாள். ஆணைவிடச் சிறிய பொருட்களை விரும்புகிறாள். சின்ன குடைகள், சின்ன பர்ஸ்கள், கைக்குட்டை கூட சின்னது. சைக்கிள், ஸ்கூட்டி போன்ற சின்ன வாகனங்கள். இப்படியே அவள் பயன்படுத்தும் அத்தனை வஸ்துக்களும் சிறியது.

புத்தகங்களை எப்;போதும் நெஞ்சோடுதான் அணைத்துச் செல்வாள். ஆண்களைப் போல் பக்கவாட்டில் இல்லை. அவளுடைய எலும்பு அமைப்பு நளினமானது. தசை நார்கள் முப்பது சதவீதம் வலிமை குறைவு. தொண்டை சின்னது. அதனால் கீச்சுக்குரல், இடுப்பு கொஞ்சம் (பிறப்புக்கு வழி பண்ண) பெரிசு.

அவள் ரத்தத்தின் அடர்;த்தி கொஞ்சம் குறைவு. அதில் ஹிமோக்ளோபின் குறைவு. நாடித்துடிப்பு ஆண்களை விட அதிகம். படக்கென்று வெட்கப்பட்டு கன்னம் சிவப்பாள். அவள் உடலில் கால்சியம் ஸ்திரமாக அமைவதில்லை. மாதவிலக்கின் போதும், கர்ப்ப காலத்திலும் அவள் நிறைய கால்சியம் இழக்கிறாள். அதனால் தைராய்ட்ட சுரப்பி பாதிக்கப்பட்டு எண்டாக்ரின்களால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவள் ஆணை விடக் கொஞ்சம் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறாள். அதிகம் அழுகிறாள். அதிகம் சிரிக்கிறாள். அதிகம் கவலையும் கொள்கிறாள். ஆயுட்காலம் ஏறக்குறைய ஆண்கள் அளவுதான். ஆனால் அதிக தினங்கள் உடல்நலமில்லாமல் இருக்கிறாள். தன்னை ஒழுங்காகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத நாட்கள் தான் அவளுக்கு அதிகம். போதுமா.. ? இத்தனை குறைபாடுகள் அவளுக்குள் இருப்பதால்தான் அவள் ஆணைச் சார்ந்திருக்கிறாள்.

"ஆண்கள் பெண்களை நிர்வாகிக்கின்றவர்கள். ஏனென்றால் அவர்களில் சிலரை (ஆண்களை) சிலரை (பெண்களை) விட அல்லாஹ் சிறப்பாக்கி வைத்திருக்கின்றான்''. (குர்ஆன் 4:34)

இவ்வளவு கஷ்டத்துடன்தான் பெண்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தோடு பின்னி பிணையப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பெண் தன் கணவனுடைய ஒத்துழைப்பை பெரிதும் எதிர்பார்க்கிறாள். கிடைக்காது போது உணர்ச்சி வயப்படுகிறாள். இதே மாதிரி கணவனும் சில வேண்டுதல் மனைவியிடம் கேட்காமலேயே எதிர்ப்பார்க்கிறான்.

"உங்கள் மனைவிகள் உங்களுக்குரிய பண்ணை. ஆகவே உங்கள் பண்ணைக்கு நீங்கள் விரும்பியவாறு சென்று உங்களுக்கு (வேண்டிய சந்ததியையும் நன்மைகளையும் தேடி) முற்படுத்திக் கொள்ளுங்கள்''.

இன்னும் சிலருக்கு 'எக்ஸிபிஷனிஸம்' என்கிய மனநோய் தொற்றி இருக்கலாம். 1877;ல் முதன்முதல் லாஸ்கி என்பவரால் ஆய்வு செய்யப்பட்ட மனநோய். தம் ஜனன அந்தரங்க உறுப்புகளை மற்றவர்களுக்குக் குறிப்பாக எதிர்பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு காட்டுவதிலேயே இனச்சேர்க்கை இச்சைகளைத் தீர்த்துக் கொண்டு நிறைவு ஏற்படுவது. இது சம்பந்தப்பட்ட துறையில் இக்குற்றத்தை 'இன்டீஸண்ட்.எக்ஸ்போஷன்' என்று சொல்கிறார்கள்.

இதுபற்றி குர்ஆனில் அல்லாஹ்:

"(நபியே) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும். தங்க்ள மர்மஸ்தானங்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளவும். அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிரதங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முந்தானைகளை தம்மேல் சட்டைகளின் மீது போட்டு (தலை, கழுத்து மார்பு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும்".

இப்பிரச்சனையுள்ள பெண்களுக்கு நமது மார்க்கத்தின் மேன்மையையும் அல்லாஹ்வின் எச்சரிக்கையும் எடுத்து சொல்ல வேண்டும்.

"மேலும் பெண்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள். அவர்களை நீங்கள் வெறுத்த போதிலும் சரியே! ஏனென்றால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் அநேக நன்மைகள் வைத்திருக்கலாம்''.

எனவே குழந்தைகளை வளர்ப்பதில் ரொம்பவும் கவனமாக கண்காணித்து வளர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைப்பருவத்தில் அறியாமையால் செய்யக்கூடிய இந்த செயல்பாடு நாளடைவில் மனரீதியாக பெரும்பாதிப்பை ஏற்படுத்துவதால் பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் ஒரு பெண்ணின் கர்ப்பத்தை மூன்று - மூன்று மாதங்களாக (ட்ரை மெஸ்டர்களாக) பிரித்துச் சொல்வது வழக்கம். ஒவ்வொரு ட்ரை மெஸ்டரிலும் அவள் உடலிலும் உள்ளத்திலம் வௌ;வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. வெளிப்படையாக மாறுதல்கள் ஏற்படுகின்றன. வெளிப்படையாக மாறுதல் ஏற்படுவதற்கு முன் ஒரு பெண்ணுக்குச் சில சமயங்களில் உணர்ச்சி ப+ர்வமான மாறுதல்கள் தோன்றலாம். சிலருக்கு வாயில் ஒரு மாதிரியான
'மெட்டாலிக் டேஸ்ட"; ஏற்படும் திடீரென்று காபி பிடிக்காமல் போகும்.

ஒரு மாதிரி மந்தமாக இருக்கும். கோபம் வரும். கண்ணீர் வரும் அசதி, டிப்ரெஷன் பரபரப்பு என்னதான் கர்ப்பமான செய்தியைப் பற்றி சந்தோஷமிருந்தாலும் இம்மாதிரி தவிர்க்க முடியாத மாறுதல்கள் அவளில் தோன்றுகின்றன. கர்ப்பமான காலத்தில் நல்ல பிடித்துப் போன கணவனைக் கூட சிலசமயம் நோக வேண்டிய நிலை அவளுக்கு வருகிறது. இதைப்போல் காரமாக, புளிப்பாக எதையாவது சுவைக்க வேண்டுமென்ற ஆசை. இதெல்லாம் தான் மசக்கை.

வாந்தி எடுக்கிற சமாசாரம் வேறு. சுமார் 60 சதவீதம் பேருக்கு இந்த உபாதை. இதன் காரணம் விஞ்ஞானத்திற்கு இன்னும் சரியாகத் தெரியவில்லை. திடீரென்று அவள் ரத்தத்தில் ஹார்மோன் அளவு அதிகமாகிவிடுவதால் ஒரு மாதரியான
'ரியாக்ஷன்' என்கிறார்கள்.

பொதுவாக முதல் மூன்று மாதங்களுக்குள் இந்த உபாதைகள் எல்லாம் நின்று போய்விடுகின்றன.

"தன்னுடைய தாய் தகப்பனுக்கு நன்றி செய்யும்படி நாம் மனிதனுக்கு நல்லுபதெசம் செய்தோம். அவளுடைய தாய் கஷ்டத்துடனேயே அவனை(கர்ப்பத்தில்) சுமந்திருந்து கஷ்டத்துடனேயே பிரசவிக்கிறாள்.'' -அல் குர்ஆன்

இதெல்லாம் பெண்கள் பிரச்சினை இவ்வளவு கஷ்டத்துடன்தான் வாழ்க்கை அவளுக்கு இருக்கிறது... ஆண்கள் சற்று யோசியுங்கள்.

தேங்க்ஸ் டு: நர்கிஸ், பிப்ரவரி 2009

கருத்துகள் இல்லை: