வியாழன், 19 மார்ச், 2009

கோவிலில் வெடிகுண்டு குவியல் பதுக்கிய சங்பரிவார்!

அதிகாலை வேளை பீகார் மாநிலம் ஹத்ரிசராய் என்ற ஊரில் தேவி அஸ் தான் கோவிலில் பூஜைக்காக ஹிந்து மக்கள் கூடினார்கள். அமைதியாக வந்த மக்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. துப்பாக்கிகள், ஐந்து ரவுண்டுகள் சுடும் அளவுக்கு தோட்டாக் கள் இருந்தது, மற்றும் பயங்கர ஆயுதங்களைக் கண்டதும் கிராம மக்கள் அச்சத்தினால் அலறினார்கள்.


உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆயுதங்களை கைப்பற்றினர்.

நாடெங்கும் கலவரங்களை நடத்தி மக்களை பிளவு படுத்தி வரும் சங்பரிவார் அமைப்பினர் மர்மமான முறையில் வெடி குண்டு புதையல்களை குவித்துவைத் திருந்தனர் என்பது நாடறிந்த விசயம்.


மாலேகானிலும், தென்காசியிலும், கேரளாவின் கண்ணூரிலும், ஆந்திராவிலும் வெடிகுண்டு குவியல் வைத்தவர்கள் எப்போது பிடிபடுவார்கள்?

கருத்துகள் இல்லை: