திங்கள், 16 மார்ச், 2009

சென்னையில் மமகவின் முதல் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் முதல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் கடந்த 15.03.09 அன்று மண்ணடி, தம்புச்செட்டித் தெருவில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எச். முஹம்மது தமீம் தலைமை தாங்கினார். தமுமுக மாவட்டச் செயலாளர் எப். உஸ்மான் அலி, துறைமுகம் மீரான், எஸ்.ஏ. அஸீம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர் பி.எஸ். ஹமீது மமகவின் அமைப்புச் செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன், பொருளாளர் எஸ்.எஸ், ஹாரூண் ரஷீது, துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தப் பொதுக்கூட்டத்தில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.





கருத்துகள் இல்லை: