செவ்வாய், 14 ஏப்ரல், 2009

திட்டச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி கொடியேற்று விழா

நாகப்பட்டிணம், ஏப். 11: நாகை மாவட்டம், திட்டச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.

தமுமுக மாவட்டத் தலைவர் ஏ.எம்.ஜபருல்லா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பரகத் அலி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் செய்யது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.

தமுமுக மாநிலத் துணைச் செயலர் ஜெ.ஹாஜாகனி, மாவட்டப் பொருளாளர் கவுஸ், துணைச் செயலர் அஸ்ரப் அலி, மாவட்ட வர்த்தகர் அணி செயலர் முகமது ரபீக், மாவட்ட மாணவரணி செயலாளர் ஹமீது ஜெகபர், கட்சியின் மாவட்டப் பொருளாளர் சுலைமான், திட்டச்சேரி கிளை பொறுப்பாளர்கள் ரியாஸ், ரித்தாவுதீன், அஸ்ரப், அமீன், சிராஜ்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி

கருத்துகள் இல்லை: