செவ்வாய், 28 ஏப்ரல், 2009

சட்டத்தின் பிடியில் இரு சண்டாளர்கள்!

கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து, மோடியின் கண்ணசைவில் கரிக்கட்டையாக்கப்பட்ட முஸ்லிம்கள் மூவாயிரம்பேர். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஏசான்ஜாப்ரியும் ஒருவர். இக்கலவரம் தொடர்பாக ஜாப்ரியின் மனைவி, மோடி மற்றும் அவரது மந்திரிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர்மீது குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் ஜாப்ரியின் மனைவி. இவ்வழக்கு தொடர்பாக தீர்பளித்துள்ள நீதிபதிகள்,

மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து மோடி மற்றும் அவரது சகாக்கள் சட்டத்தின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். இறைவன் நாடினால் சிறையின் வளையத்திற்குள்ளும் செல்லும் நாள்வரும்!

அடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்னாள் பத்திரிக்கையை விரித்தால் ஏதாவது ஒரு படப்பூஜையில் நடிகைக்கு பக்கத்தில் நின்றுகொண்டு குத்துவிளக்கு ஏற்றி போஸ் கொடுத்த முன்னாள் இந்தியன் வங்கி தலைவர் திருவாளர்.கோபாலகிருஷ்ணன் நினைவிருக்கிறதா? அவர்,முஸ்லிம்களுக்கு தமிழக அரசு இடஒதுக்கீடு வழங்கியபோது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததோடு மட்டுமன்றி, சங்பரிவார கும்பலுடன் சேர்ந்து போராட்டம் நடத்தியவர். இந்த சங்பரிவாரின் ஊதுகுழல், இந்தியன்வங்கி தலைவராக பதவியில் இருந்தபோது, மும்பை நிறுவனம் ஒன்றிற்கு விதிமுறைகளை மீறி கடன் வழங்கிய வழக்கில் அவருக்கு நீதிமன்றம் 28 .ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ 70 .லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த இரு தீர்ப்புகளும் எதை உணர்த்துகிறது எனில், அல்லாஹ்வை மட்டும் நம்பிய காரணத்தால் ஒரு முஸ்லீம் அநீதிக்கு உள்ளானால் காலம் கடந்தாலும் அந்த முஸ்லிமுக்கு அநீதி இழைத்தவர்களை இறைவன் தண்டிக்காமல் விடமாட்டான் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஒருவேளை இத்தகையவைகள் தங்களுடைய செல்வாக்கால் தண்டனையிலிருந்து தப்பித்தாலும், நாளை மறுமையில் இறைவனின் தண்டனையிலிருந்து ஒருக்காலும் தப்பமுடியாது என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை: