சனி, 11 ஏப்ரல், 2009

பிஜேபிக்கும் பி.ஜேக்கும் ஆப்பு வைத்த மனிதநேய மக்கள் கட்சி





மமக அதிமுகவுடன் சேரும் என்பது பிஜே-வின் கனவுகளில் ஒன்று. மமகவின் தாய் கழகமான தமுமுக, அதிமுக குறித்து வைத்த கடுமையான விமர்சனங்களை சுட்டிக் காட்டி சுட்டிகாட்டியேய் தினசரி அரசியலை நடத்தலாம் என நினைத்திருந்த பி.ஜேயின் கனவு கலைந்தது.

ஜெயலலிதாவுடன் பி.ஜே உறவு வைத்திருந்த காலத்தில் தமுமுக, பிஜேவையும் ஜெ.ஜெவையும் விமர்சித்தை Re-Play பண்ணி பண்ணியே மமகவுக்கு செக் வைக்கலாம் என்ற நினைத்த கனவும் பாலானது.

திமுகவை தமுமுக பாராட்டிய கால கட்டங்களை ஒன்று விடாமல் ஒப்பு வித்து மமகவும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தலாம் என்று நினைத்த இழி கனவும் கலைந்தது.

இனி பிஜேபிக்கு ஆப்பு வைத்ததை பார்க்கலாம்.

தமிழகத்தில் பிஜேபியை அரசியல் அனாதையாக ஆக்கிய பெருமை மமகவிற்கே சேரும். தமிழகத்தில் யாராவது லட்டர் பேடு இயக்கத்தோடாவது கூட்டணி வைத்து விடலாமா என்ற ஏக்கத்தில் இருந்த பிஜேபிக்கு சரத்குமாராவது சேர்நதாரே என்று ஆறுதல் பட்டுக் கொண்டிருந்தது.

அந்த ஆசைக்கும் ஆப்பு வைத்தது மனிதநேய மக்ககள் கட்சி

கருத்துகள் இல்லை: