
இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரதிநிதிகள் உள்பட 6 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பங்கேற்பார்கள் என துபாய் காவல்துறை அவசர பாதுகாப்பு பிரிவு தலைவர் முஹம்மது ஈத் அல் மன்சூரி தெரிவித்தார்.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.
சவூதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்களுள், வெகு சிலரே தங்கள் மனைவி-மக்களோடு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மற்ற பெரும்பாலோர் தங்கள் குடும்பத்தை தாயகத்திலிருந்து பிரிந்தே, சவூதியில் பணிபுரிந்து வருகின்றனர். மிகக்குறைந்த சம்பளத்தில் கடுமையான வேலைகளைச் செய்யும் அதே நேரத்தில், தங்கள் இளமையையும் தொலைக்க நேரிடுகின்றது. அவர்களும், தங்கள் குடும்பத்தை சவூதிக்கு கொண்டு வர முடியாததற்கு குறைந்த சம்பளம், அரசாங்கம் விசா தராமை போன்ற பல காரணங்கள் உள்ளன.
சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் (இக்காமா) அவர்களின் செய்யும் தொழிலும் (புரஃபஷன்) குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் நிறைய பேர்களுக்கு, அவர்கள் செய்யும் வேலைக்கும், இக்காமா குறிப்பிடப்பட்டிருக்கும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால், தங்கள் மனைவி-மக்களை ஃபேமிலி விசாவில் அழைத்து வருவதற்கு, சவூதி வெளியுறவு அமைச்சகம், “மருத்துவர், பொறியியலாளர், டெக்னீஷியன், மேலாளர்கள்” போன்ற புரஃபஷன் உள்ளவர்களுக்கு இத்தனை நாட்கள் விசா வழங்கி வந்துள்ளது. பலரும், நல்ல வேலையில், நல்ல சம்பாத்தியத்தில், நல்ல படிப்பு படித்திருந்தாலும், அவர்களது இக்காமாவில் புரஃபஷன் தவறாக இருந்ததால், தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து தங்கி வேலை புரிய முடியாமல் இருந்து வந்தது.
தற்போது, நல்ல சம்பளத்தில் நல்ல வேலையில் உள்ளவர்களின் புரஃபஷன் என்னவாக இருந்தாலும், அவர்களுக்கு ஃபேமிலி விசா வழங்க சவூதி சவூதி அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம், சுமார் 70 லட்சம் வெளிநாட்டவர்கள் பயன் பெறுவார்கள் என்று, “அல்-யவ்ம்” அரபு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இனி ஃபேமிலி விசாவானது அவரவர்கள் வாங்கும் சம்பளத்திற்கேற்ப நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னறிவிப்பாக, ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக, மூன்று நாட்களுக்கு மட்டும் ரியாதில் விண்ணப்பித்த அனைவருக்கு ஃபேமிலி விசா வழங்கப்பட்டது. தற்போது, அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல், அரசின் அறிவிப்பிற்குப் பிறகு, சம்பள அடிப்படையில் மட்டும் ஃபேமிலி விசா வழங்கப்படும் என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது. இம்மாதிரியாக விசா வழங்குவது எந்த தேதியில் அமுலுக்கு வரும் என்பதை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாகவே, தங்களது பாஸ்போர்டில் தங்களது மனைவியின் பெயரைச் சேர்க்கவும் (Spouse Name), இந்தியன் எம்பஸியை அணுகி வருகின்றனர்.
அதே வேளையில், குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கும் வகையில் வழங்கப்படும் “விசிட் விசா”, விண்ணப்பிக்கும் அனைவருக்கும், புரஃபஷனை கணக்கில் கொள்ளமால், கடந்த மூன்று வாரங்களாக ரியாத் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் வழங்கபட்டு வருவது குறிப்பிடத் தக்கது. தற்போது ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர்களுக்கு விசிட் விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
அரசின் இந்த முடிவிற்கு பலரும் நன்றி தெரிவித்துள்ள இவ்வேளையில், தற்போது குடும்பத்தோடு சவூதியில் பணிபுரிபவர்களில் சிலர், வீட்டு வாடகையும் இதன் மூலம் துபாய் போல அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
செய்தி: ரியாதிலிருந்து ஃபெய்ஸல்
நாடு முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ளோர் விடு விக்கப்பட வேண்டும் உள் ளிட்ட 14 கோரிக்கைகளு டன் அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர்.
அக்கோரிக்கைகள் பரி சீலிக்கப்பட்டு உரிய நட வடிக்கைகள் எடுக்க மன் மோகன்சிங் உறுதியளித்த தாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், ரயில்வே இணையமைச்சருமான இ. அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அனைத் துக் கட்சி முஸ்லிம் உறுப் பினர்களான மத்திய இணையமைச்சர் இ. அஹமது, நாடாளு மன்ற மேலவைத் தலைவர் ரஹ் மான்கான், திருமதி மொஹ்சினா கித்வாய், மஹ்மூத் மதனீ, தாரிக் அன்வர், அஸாஸ{தீன் உவைஸி, முஹம்மது அதீப், அஹமது சயீது மலேகாபாடி, ஷபீர் அலி, டாக்டர் இஜாஸ் அலி, ஷபீகுர் ரஹ்மான் பர்க், முஹம்மது ஷபி ஆகிய எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 14 முக்கிய பிரச் சினைகளை நிறை வேற்றும்படி கோரிக்கை விடுத்தார்கள்.
அவை வருமாறு-
1. வக்ஃபுசொத்துக்கள் தொடர்பாக ஜே.பி.சி. அறிக்கையை நிறைவேற்ற வும், வக்ஃபு சட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. ஹஜ் பயணம் தொடர்பாக போதிய சீர் தி ருத்தங்களை கொண்டு வர ஏற்கனவே ஒரு அமைச் சரவை குழுபரிந்துரை செய்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை.
3. முஸ்லிம் சிறு பான்மையினருக்கான இடஒதுக்கீடு தொடர் பான கோரிக்கை நீண்ட நாளாக நிலுவையில் உள் ளது. அவை தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் குறிப்பிடப் பட் டுள்ளது. கேரளா, தமிழ் நாடு, கர்நாடக மாநிலங் களில் முஸ்லிம் களுக்கு அனுமதிக்கப்பட் டிருக் கும் ஒதுக்கீட்டின் அடிப் படையில் இட ஒதுக்கீடு பிரச்சினை தீர்க்க நட வடிக்கை எடுக்க வேண் டும்.
4. ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
5. சச்சார் கமிட்டி அறிக் கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் தாம தம் ஏற்பட்டுள்ளது. பரிந் துரைகள் அமுல்படுத்து வதை கண்காணிக்க ஒரு மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும்.
6. முஸ்லிம் சிறு பான்மையினருக்கும் மற்றவர்களுக்கும் கல்வி வழங்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும் சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. அங்கீகாரம் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.
7. இஸ்லாமிய வங்கி முறையை அமுல்படுத்த நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டுள் ளது. அந்த முறை வங்கித் துறைக்கு பெரிய முத லீட்டையும் முஸ்லிம்கள் மத்தியில் சேமிப்பு பழக் கத்தையும் ஏற்படுத்தும்.
8. பிரதமரால் அறிவிக் கப்பட்ட 15 அம்ச திட்டம் நிறைவேறுவதை கண் காணிப்பது வலுப்படுத்தப் பட வேண்டும்.
9. பயங்கரவாத தொடர்பு ஐயப்பாடு கார ணமாக ஏராளமானவர்கள் எந்தவித விசாரணையு மின்றி நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்கள் மீதுள்ள வழக்குகள் முடிக்கப்படவோ அல்லது அவர்கள் விடுதலை செய் யப்படவோ வேண்டும்.
10. உத்தேசிக்கப்பட் டுள்ள மதரஸா வாரியத்தை அமைப்பதற்கு முன் முஸ்லிம் உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், தலை வர்கள் ஆகியோரை அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.
11. முஸ்லிம்கள் தொடர்பான அமைப்பு களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் கட்டுப்பாடுகளும், தாமதமும் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.
12. மத வன்முறை தடுப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.
13. மற்ற தேசிய கமிஷன்களுக்கு கொடுக் கப்பட்டிருக்கும் அரசியல் சட்ட அந்தஸ்தை சிறு பான்மை கமிஷனுக்கும் கொடுக்க வேண்டும்.
14. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமிஆ மில்லியா இஸ் லாமிய பல்கலைக்கழகங் களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண் டும்.
மேற்கண்ட கோரிக் கைகளை விரைவில் நிறை வேற்றித் தரும்படி வேண்டு கோள் விடுத்த எம்.பி.க்கள் சிறுபான்மை விவகாரத் துக்காக தனி அமைச்சரகம் அமைத்ததற்கும் நன்றி தெரிவித்தார்கள்.
பிரதமர் உறுதி
மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மன் மோகன்சிங் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து போதிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து முடிவு செய்ய தேசிய அளவில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண் டியுள்ளது. இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு காணப்படும் என்று தெரி வித்தார்.
வக்ஃபு சொத்துக்களை மேம்படுத்துவது குறித்தும் அது தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்தும் பிரதமர் குறிப்பாக தனது விருப்பத்தை வெளியிட் டார். அந்த சட்டம் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் என் றார்.
ஹஜ் பயணம் தொடர் பான சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப் படும் என்றும் பிரதமர் கூறினார்.
வட்டியில்லாத வங்கித் தொழில் துறை குறித்து நிதியமைச்சருடன் கலந்தாலோசிப்பதாக பிரதமர் அறிவித்தார். நீண்டகாலமாக சட்ட விரோதமாக சிறையில் வாடுபவர்கள் குறித்து மிக விரைவில் நீதி நிலை நாட்டப்படும் என்றும் பிரதமர் சொன்னார்.
சிறுபான்மை விவகாரம் கண்காணிக்க நியமிக்கப் பட்டிருக்கும் நிலைக்குழு தலைவர்களுடன் பேசி கண்காணிப்பு வேலை களை வலுப்படுத்தும் படியும் தீவிரப்படுத்தப் படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டு வந்த தூதுக்குழு உறுப் பினர்களுக்கு பிரதமர் நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் மத்திய ரயில் இணையமைச்சரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான இ.அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி நடவடிக்கைகளால் சிறிய பெரிய அளவிலான ஊழல் பேர்வழிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2008 மார்ச் முதல் 2009 மார்ச் மாதத்திற்குள் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்பழுக்கற்ற நேர்மையான காவல்துறை அதிகாரி ஏ.டி.ஜி.பி. ராமானுஜம் அவர்கள் லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவராக இருந்த காலக்கட்டத்தில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.
வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் லஞ்சம் உள்பட தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறும் லஞ்ச ஊழலை தடுத்து நிறுத்த முடியவில்லை என்ற நிலை மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
சிறிய அளவிலான ஊழல் குற்றங்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்படுவதும், மிகப்பெரிய அளவிலான ஊழல் குற்றங்கள் மறைக்கப்படுவதும் தமிழகத்தில் சர்வசாதாரணமான நிகழ்வுகளாக ஆகிவிட்டது.
லஞ்ச ஒழிப்பு துறைக்கு திரு. ராமானுஜம் (ஏ.டி.ஜி.பி) பொறுப்பில் இருந்த போது, பாரபட்சமின்றி நடவடிக்கைள் எடுக்கப்பட்டன. லஞ்ச ஊழல் முறைகேடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. ஆனால் திரு. ராமானுஜம் அவர்கள் அத்துறையில் இருந்து மாற்றப்பட்ட பிறகு தற்போது லஞ்ச ஒழிப்பு துறையின் செயல்பாடுகள் வீரியம் இழந்துள்ளன. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைகளுக்கு மூக்கனாங்கயிறு போடுவதற்காகவே திரு. ராமானுஜம் அத்துறையில் இருந்து மாற்றம் செய்துள்ளது போல் தெரிகின்றது. அவர் இடமாற்றம் செய்த பிறகு லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கைகள் திடீரென குறைக்கப் பட்டன. இந்த நடவடிக்கை குறைப்பு ஊழல் பேர்வழிகளுக்கு உதவி புரியும் படி அமைந்துள்ளது. லஞ்சம் பல்கி பெருக வழிவகுக்கும் வகையில் திமுக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது.
தமிழகத்தில் பெருகி வரும் லஞ்ச ஊழல்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என திமுக அரசுக்கு அக்கறை இருந்தால் மீண்டும் திரு. ராமானுஜம் அவர்களை லஞ்ச ஒழிப்பு துறையின் தலைவராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த நிலை தொடருமாயின் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம்.
பாபர் மற்றும் இப்றாகிம் லோடி தலைமையிலான படைகளும் பானிபட் யுத்தத்தில் மோதிக் கொண்ட போது இரு படைகளிலும் ஹிந்துக்களும் போர்வீரர்களாக போரிட்டார்கள். இந்த போரில் வெற்றி பெற்று டெல்யில் தனது ஆட்சியை நிறுவினார் பாபர். பாபரி மஸ்ஜிதிற்கான அடிக்கல்லை நாட்டி அதனை 1523ல் கட்ட ஆரம்பித்தவர் இப்றாகீம் லோடி தான். அந்த பள்ளிவாசல் லோடி மஸ்ஜித் என்றும் கோட்டை மஸ்ஜித் என்றும் தான் முதல் அழைக்கப்பட்டது. முகலாய அரசு அயோத்தி பகுதியில் பரவிய போது, அப்பகுதிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட மீர் பாகி இந்த பள்ளிவாசலை முழுமைப் படுத்தி அதற்கு தனது அரசரின் பெயரைச் சூட்டினார். அயோத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்டிருந்த ஆலயத்தை இடித்து விட்டு தான் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று ஆர்.எஸ். சர்மா, சுசில் ஸ்ரீவத்ஸவா, ஷேர் சிங் போன்ற அப்பழுக்கற்ற வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார்கள். இது மட்டுமல்ல ராமயணத்தை ஹிந்துஸ்தானியில் மொழிபெயர்த்த துளசிதாசர் பாபரி மஸ்ஜித் கட்டப்பட்ட காலத்தில் அயோத்தியில் வாழ்ந்தவர். ஸ்ரீராமசந்திர மனாஸ் என்ற தனது காப்பியத்தியில் ஸ்ரீராமருக்கு கட்டப்பட்ட ஆலயத்தை இடித்து விட்டு பாபர் ஆட்சியின் போது பள்ளிவாசல் கட்டப்பட்டது என்று எந்த ஒரு குறிப்பையும் அவர் தரவில்லை. பாபரி பள்ளிவாசல் வளாகத்தில் பள்ளிவாசல் ஒரு பக்கம் இருக்க அதன் ஒரு மூலையில் திண்ணை ஒன்றை எழுப்பி அங்கு ஸ்ரீராமர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு 1870களில் ஆங்கிலேயேர்களின் சதியினால் ஏற்பட்டது. அயோத்தி பகுதியில் 1857ல் நடைபெற்ற முதல் விடுதலைப் போரில் ஹிந்துக்களும் முஸ்ம்களும் ஒன்றிணைந்து போரிட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெள்ளைக்காரர்கள் தங்கள் பிரித்தாளும் தந்திரத்தை நடைமுறைப்படுத்தவே இந்த சதிச் செயலைச் செய்தார்கள். இந்த உண்மை வரலாற்றை மறைத்து இல. கணேசன் பாபரி மஸ்ஜிதை கொச்சையாக விமர்சித்திருப்பது அவரது அறியாமையையும், வஞ்சகத்தையும் தான் வெளிப்படுத்துகின்றது. இந்தியா என்ற மாபெரும் மதசார்பற்ற நாட்டின் மதசார்பின்மைக்கு ஒர் எடுத்துக் காட்டாக பாபரி மஸ்ஜித் விளங்கியது. பன்முக பண்புள்ள இந்தியாவை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் உதாசீனப்படுத்தி டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதச் செயல் ஈடுபட்டு தேசத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள் தான் இல. கணேசனின் கூட்டத்தினர். முஸ்ம்கள் தேசபற்றில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. நமது நாட்டின் உயிர் மூச்சாக விளங்கும் மதசார்பின்மை மற்றும் பன்முகத் தன்மைகளை கால் போட்டு மிதித்த இல. கணேசன் போன்றோர் லிபரான் ஆணையத்தின் அறிக்கையை படித்து திருந்தட்டும்.
கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மார்க்க அறிஞர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சூஃபியா மதானியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்ற காவலில் வைக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முத்துப்பேட்டையில் 11/12/2009 அன்று முத்துப்பேட்டை நகர பா.ஜ.க வினர் பொதுக்கூட்டம் என்ற போர்வையில் கலவரத்தை தூண்டும் வண்ணம் முஸ்லிம்களையும்,தமுமுக வினரையும் தகாத வார்த்தை களாலும் கொலை வெறி மிரட்டலோடும் பேசி சென்றுள்ளனர். அந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வின் ஹெச்.ராஜா முஸ்லிம்களை தரைகுறைவாக வாயல்சொல்ல முடியாத வார்த்தை களாலும், இழிவான முறையிலும் பேசியதுடன் முஸ்லிம்களை மிரட்டியும் சென்றுள்ளார். அதனை தொடந்து பேசிய பேட்டை சிவா,கருப்பு.மற்றும் சிலரும் முஸ்லிம்களையும்.தமுமுக வையும் கடுமையான முறையில் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் மானங்கெட்ட வார்த்தை களால் திட்டியுள்ளனர்.
ஒன்று திரண்ட நம் சகோதர்களை அமைதி படுத்திய தமுமுக வினர், நகர செயலாளர் வழக்கறிஞர் தீன்முஹம்மது தலைமயில் இன்று காலை காவல்நிலையம் சென்று ஹெச்.ராஜா,கருப்பு(எ)முருகானந்தம், பேட்டை சிவா ஆகியோர் மீது கொலைவெறியை தூண்டுதல் 307 or 506 (2), மதவெறியை தூண்டுதல் 153, பொய்யான செய்தியை பறப்பி மதகலவரத்தை தூண்டுதல் 505 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய சொல்லி புகார் கொடுத்து மனு ரஷீது பெற்றுள்ளனர்.
தமுமுகவினரிடம் காவல்துறை ஆய்வாளர் கூறும் போது குற்றவாளிகள் மீது மேலே கண்ட வழக்கு பிறிவின்படி முதல் தகவல்(FIR) அறிக்கை பதிவுசெய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
— முத்துப்பேட்டை முகைதீன்
Source : www.muthupet.orgஇறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு நபி தோன்றியுள்ளார் என மார்க்கத்தை தன் மனோ இச்சைக்கு பயன்படுத்திய மிர்ஸா குலாமின் புதிய மதமான காதியானி அஹ்மதியாக்கள் மற்றும் நவீன குழப்பவாதிகள் 19 கூட்டத்தார் குறித்து ஆலோசனை நடத்த வேண்டி 16.12.2009 அன்று சென்னையில் ஷரீஅத் பாதுகாப்பு பேரவை ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
அதில் தமிழகத்தின் அனைத்து சமுதாய அமைப்புகளும் கலந்து கொண்டன. தமுமுக, இதஜ, முஸ்லிம்லீக், தேசியலீக், மறுமலர்ச்சி முஸ்லிம்லீக், ஜமாஅத்தே உலமா ஹிந்த், ஜமாஅத்தே இஸ்லாமி, பி.எஃப்.ஐ, தமிழ்நாடு தொண்டு நிறுவனம், முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு, ஈ.வி.க, அஹ்லே ஹதீஸ், தஃப்லிக் ஜமாஅத், காஸிஃபுல் ஹுதா உட்பட அனைத்து அமைப்புகளும் கலந்து கொண்டன.
இதன் பிரதிநிதிகளாக ஹைதர்அலி, முனீர், டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, குலாம் முஹம்மது, சிக்கந்தர், தெஹ்லான் பாகவி, ஜின்னா, நிஜாமுதீன் மன்பஈ, ஷம்ஸுதீன் காஸிமி, முஹம்மது கான் பாகவி உட்பட சமுதாய தலைவர்கள், ஆலிம் பெருமக்கள் அனைவரும் ஒன்று கூடினர்.
அல்லாஹுடைய மார்க்கத்திற்கு எதிராக கலகம் செய்யும் காதியானிகள் மற்றும் 19 கூட்டத்தினரை முஸ்லிம்கள் அல்ல என தீர்ப்பளிக்க முடிவு செய்தனர். இவர்கள் நிராகரிப்பாளர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ். பொதுவான பிரச்னையில் தீர்ப்பு எடுக்க சமுதாய அமைப்புகள் ஓரணியில் இணைந்தது மகிழ்ச்சியினை அளிக்கிறது.