முத்துப்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்துப்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 செப்டம்பர், 2010

முத்துப்பேட்டையில் கலவரத்தைத் தூண்ட முயன்ற ஹிந்துமுன்னணி

முத்துப்பேட்டை,செப்.19:திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஒரு இளைஞரால் லேசான சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் போலீஸாரின் சமயோஜிதத்தால், பெரும் கலவரம் மூளாமல் தவிர்க்கப்பட்டு விட்டது.

ஆண்டுதோறும் முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாக முஸ்லீம் குடியிருப்புகள் வழியாக ஊர்வலம் போக கோர்ட் தடை விதித்தது.

இருப்பினும் ஊர்வலம் இந்தப் பாதைகள் வழியாக செல்வது தொடர் கதையாக நீடிக்கிறது. கடந்த ஆண்டு முதல் மாற்றுப் பாதை வகுக்கப்பட்டு அந்த வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த முறையும் பிரச்சினை வந்து விடாமல் தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது.

நேற்று மதியம் மூன்று மணிக்கு ஜாம்பவான் ஓடை கிராமத்தில் உள்ள சிவன் கோயில்களில் இருந்து புறப்பட்டு, சுமார் ஐந்து கிலோமிட்டார் வரை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் இறுதியில் கிழக்குக்கடற்கரை சாலியில் உள்ள பாமணி ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.

விநாயகர் ஊர்வலம் இஸ்லாமியர் பகுதிக்குள் வந்துகொடிருந்த ஒபோது, வேலூர் எம்.பி. அப்துல்ரகுமான் வீட்டில் கல் எறிய முயற்சித்த ஒரு இளைஞரை போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் வேனுக்குள் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

அந்த இளைஞர் தடுத்து பிடிக்கப்பட்டதால் பிரச்சினை ஏதும் இல்லாமல் போய் விட்டது. இல்லாவிட்டால் பெரும் அமளியாகியிருக்கும். இந்த சிறு சம்பவத்தால் லேசான பதட்டம் ஏற்பட்டு பின்னர் தணிந்தது.

தட்ஸ் தமிழ்

சனி, 6 பிப்ரவரி, 2010

முத்துப்பேட்டையை மீண்டும் கலவரமாக்கிய பா.ஜ.க.! கைக்கூலியாகும் காவல்துறை?

முத்துப்பேட்டையில் சங்பரிவார அமைப்புகளால் திட்டமிட்டு கலவரங்கள் உண்டாக்கப்படுவதும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் வருடா வருடம் வன்முறையை தூண்டி வரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பல்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம்களை சீண்டி வருகின்றன.

கடந்த டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு நாளையொட்டி தமுமுக சார்பிலும் சமுதாய அமைப்பு களின் சார்பிலும் அமைதியான முறை யில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. ஆயிரக்கணக்கில் திரண்ட சமுதாய அமைப்புகளின் எழுச்சியைப் பார்த்து வன்மம் கொண்ட பா.ஜ.கவினர் வன் முறையை தூண்டும் விதமாக பேசி யதாக சொல்லி தமுமுகவினர் மீது புகார் அளித்தனர். உடனடியாக செயல்பட்ட காவல்துறை கண்டன உரை நிகழ்த்திய தமுமுக மாநில உலமா அணிச் செயலாளர் மௌலவி யூசுப். எஸ்.பி. அவர்கள் மீது வழக்குகள் போட்டது. மேலும், டிசம்பர் 12லிம் தேதி லிபரான் கமிஷன் அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சொல்லி கலவர நாயகன் ஹெச்.ராஜாவை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா தமுமுகலிவையும், முஸ்லிம் களையும் கேவலமாக பேசியுள்ளார். தரக்குறைவாகவும் மதமோதலை தூண் டும் வகையிலும் பேசிய ராஜா 'அடுத்த வருடம் முத்துப்பேட்டையில் டிசம்பர் 6 போராட்டம் நடத்தினால் அவர்களை அதே இடத்தில் வெட்டிப் புதைப்போம்' என்றார். ராஜாவின் அராஜகப் பேச்சை பதிவு செய்த தமுமுக வினர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ராஜா மீது புகார் அளித்தனர்.

பா.ஜ.க வின் புகாருக்கு உடனடியாக செயல்பட்ட காவல்துறை தமுமுகவின் புகார் மனுவை கூட இழுத்தடித்து பதிவு செய்தது. ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இந்நிலையில் முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது தாவூத் என்பவர் வியாபார விஷயமாக முத்துப்பேட்டையிலிருந்து 1.5 கி.மீ. தொலைவிலுள்ள பேட்டை என்ற பகுதிக்கு வாகனத்தில் சென்றுள்ளார். அவரை வழிமறித்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் பேட்டை சிவா என்பவன் தலைமையிலான கும்பல் தாவூதை அடித்து அவருடைய செல்போன் பணம் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு அனுப்பிவிட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாவூத் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் முத்துப்பேட்டை காவல்நிலையை எஸ்.ஐ. ஆனந்த தாண்டவம், சிவா மீதெல்லாம் கேஸ் போட முடியாது. என்று மிரட்டியுள்ளார். பின்னர் தமுமுகவின் தலையீட்டின் பேரில் புகாரை பதிவு செய்த போலீஸ் இதுவரை சிவா மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஆந்திரமடைந்த பேட்டை சிவா கடந்த 28லி1லி2010 அன்று தனது வாகனம் தாக்கப்பட்டதாகவும், தாக்கியது முஸ்லிம்கள் தான் என்றும் முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளான். பின்னர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த கூலிப்படைகள் மற்றும் சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு என் வண்டியை தாக்கிட்டானுங்க, துலுக்க நாய்களை வெட்டுடா என்று செல்போனில் ஆணையிட பேட்டையில் குடியிருக்கும் சுமார் 30 முஸ்லிம் குடும்பங்களை சூறையாட கிளம்பின வன்முறை மிருகங்கள்.

சங்பரிவார கும்பல்கள் தங்களை தாக்க வருகின்ற செய்தியை அறிந்த பேட்டை முஸ்லிம்கள் முத்துப்பேட்டையிலுள்ள சமுதாய அமைப்பினருக்கும், ஜமாத்தார்களுக்கும் தகவல் அளித்தனர். செய்தியறிந்து முத்துப்பேட்டையில் இந்து முஸ்லிம் இளைஞர்கள் திரள ஆரம்பித்தனர். ஆனால் அதே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்பரிவார் ரவுடிகள் பேட்டையிலிருந்த முஸ்லிம்களின் கடைகளை அரிவாள், கோடாரி, இரும்பு கம்பிகளால் உடைத்து நொறுக்கினர். ஷரீப் என்பவரது கடை நாசமாக்கப்பட்டது. மேலும் முத்துப் பேட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை அரிவாளால் வெட்டி னர். இச்செய்தியால் ஆவேசமடைந்த முஸ்லிம் இளைஞர்கள் பேட்டையை நோக்கி திரண்டு வர அதுவரை அமைதி காத்த போலீஸ் இரு தரப்பையும் தடியடி நடத்தி விரட்டியடித்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டை ரோடு செம்படவன் காடு மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் மனார் ஸ்பேர்பார்ட்ஸ் கடைக்கு பின்புறம் இருந்த கொட்டகைக்கும், பக்கத்திலிருந்த குடோன் ஒன்றுக்கும் தீ வைத்த காவிக் கும்பல் பழைய பேருந்து நிலையத்தில் இந்து சகோதரர் ஒருவருக்கு சொந்தமான காய்கறிகடையையும் தீயிட்டு கொளுத்தியது.

தீயிட்டு கொளுத்திய காவிக்கும்பல் இந்துக் கடையை முஸ்லிம்கள் எரித்து விட்டதாக வதந்தியை பரப்பியது. இதனால் கலவரம் பல இடங்களிலும் பரவ ஆரம்பிக்க அப்போது தான் இயங்கத் தொடங்கிய காவல்துறை உடனடியாக காவலர்களை கொண்டு வந்து குவித்தது.
டி.ஐ.ஜி. கரன்சின்ஹா, திருவாரூர் மாவட்ட எஸ்.பி. பிரவீன் குமார் அபிநவ் உட்பட நான்கு மாவட்ட எஸ்.பிக்கள் முத்துப்பேட்டையில் முகாமிட்ட னர். கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இதுவரை முஸ்லிம்கள் தரப்பில் சிராஜுத்தீன், சாஹுல்அமீது, ஷேக் தாவூத், வாஸிம் கான், அயூப்கான், சையத் அலி ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

இதில் வாஸிம் கானுக்கு பதினேழு வயது மட்டுமே ஆகிறது. ஆனால் சங்பரிவார் தரப்பில் இதுவரை 7 பேரை மட்டுமே கைது செய்த காவல்துறை மீதி நபர்களை தேடிக் கொண்டிருப்பதாக கூறுகிறது.

இது தொடர்பாக முத்துப்பேட்டை நகர காவல் ஆய்வாளர் சமரசத்திடம் பேசினோம். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். இரு தரப்பிலும் கைதுகள் நடந்திருக்கின்றன. என்று கூறிய ஆய்வாளரிடம், பேட்டை சிவா கார் தாக்கப்பட்டது. உண்மையா? காரை தாக்கியவர்கள் யார்? அவர்களை கைது செய்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்து போனை துண்டித்து விட்டார்.

கலவரத்துக்கு காரணமான கார் தாக்குதல் சம்பவம் பற்றி பேச ஏன் காவல்துறை மறுக்கிறது. வாகனத்தை தாக்கியதாக பொய்யான புகாரை கூறி அதன் மூலமாக திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய பா.ஜ.க மாவட்ட செயலாளர் பேட்டை சிவா மற்றும் கருப்பு(எ) முருகானந்தம் ஆகியோர் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

தொடர்ந்து காவல்துறை காவிக்கும் பலுக்கு முட்டுக் கொடுத்து வருகின்றது. இப்போக்கு முத்துப்பேட்டையை இன்னொரு கோவையாக உருவாக்கி விடக்கூடாது என்பது தான் நடுநிலையாளர்களின் எண்ணம். காவல்துறை சிந்தித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமா?

வியாழன், 17 டிசம்பர், 2009

முத்துப்பேட்டை : பி.ஜே.பி யினர் மீது தமுமுக வழக்கு




முத்துப்பேட்டையில் 11/12/2009 அன்று முத்துப்பேட்டை நகர பா.ஜ.க வினர் பொதுக்கூட்டம் என்ற போர்வையில் கலவரத்தை தூண்டும் வண்ணம் முஸ்லிம்களையும்,தமுமுக வினரையும் தகாத வார்த்தை களாலும் கொலை வெறி மிரட்டலோடும் பேசி சென்றுள்ளனர். அந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வின் ஹெச்.ராஜா முஸ்லிம்களை தரைகுறைவாக வாயல்சொல்ல முடியாத வார்த்தை களாலும், இழிவான முறையிலும் பேசியதுடன் முஸ்லிம்களை மிரட்டியும் சென்றுள்ளார். அதனை தொடந்து பேசிய பேட்டை சிவா,கருப்பு.மற்றும் சிலரும் முஸ்லிம்களையும்.தமுமுக வையும் கடுமையான முறையில் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் மானங்கெட்ட வார்த்தை களால் திட்டியுள்ளனர்.

முத்துப்பேட்டை பாசிஸ கும்பலின் தலைவன்
கருப்பு
( ) முருகானந்தம்

ஒன்று திரண்ட நம் சகோதர்களை அமைதி படுத்திய தமுமுக வினர், நகர செயலாளர் வழக்கறிஞர் தீன்முஹம்மது தலைமயில் இன்று காலை காவல்நிலையம் சென்று ஹெச்.ராஜா,கருப்பு(எ)முருகானந்தம், பேட்டை சிவா ஆகியோர் மீது கொலைவெறியை தூண்டுதல் 307 or 506 (2), மதவெறியை தூண்டுதல் 153, பொய்யான செய்தியை பறப்பி மதகலவரத்தை தூண்டுதல் 505 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய சொல்லி புகார் கொடுத்து மனு ரஷீது பெற்றுள்ளனர்.

தமுமுகவினரிடம் காவல்துறை ஆய்வாளர் கூறும் போது குற்றவாளிகள் மீது மேலே கண்ட வழக்கு பிறிவின்படி முதல் தகவல்(FIR) அறிக்கை பதிவுசெய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

— முத்துப்பேட்டை முகைதீன்

Source : www.muthupet.org