செவ்வாய், 29 டிசம்பர், 2009

தமுமுக அலுவலகம் திறப்பு விழா

மேலப்பாளையம் 29வது வார்டு த.மு.மு.க.கிளையின் சார்பில் புதிய அலுவலகம் திறப்பு விழா, இரத்தப்பிரிவு கண்டறியும் முகாம் 27.12.2009 காலை 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். 29வது வார்டு தலைவர் பி.செய்யது அப்துல் காதர், செயலாளர் ஏ.கே.அப்துல் கனி, பொருளாளர் எஸ்.ஏ.அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதிய அலுவலகத்தை மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் அவர்கள் திறந்து வைத்து கழகக் கொடியை ஏற்றினார். மாவட்ட தலைவர் ஏ.மைதீன் பாரூக் அவர்கள் இரத்தப் பிரிவு கண்டறியும் முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக் கணக்கானோர் தங்களுடைய இரத்தப்பிரிவை தெரிந்து கொண்டனர். நகர நிர்வாகிகள் ஊர் ஜமாத்தார்கள் உள்பட திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

அன்று இரவு நகர த.மு.மு.க.சார்பில் த.மு.மு.க.வின் 16வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 16 பொதுக்கூட்டத்தின் முதல் கூட்டமாக ஹாமீம்புரத்தில் சமூக எழுச்சி தெருமுனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஏ.மைதீன் பாருக், தலைமைக் கழக பேச்சாளர் காசீம் பிர்தௌசி, மாவட்ட துணைத்தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் ஆகியோர் உரையாற்றினார். இதிலும் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்: அப்துல் வாஹித்

கருத்துகள் இல்லை: