செவ்வாய், 22 டிசம்பர், 2009

ஈரான் அரசின் ஆலோசகரும் மூத்த மதபோதகருமான அயதுல்லா ஹொசைன் அலி மொண்டாசாரி மரணம்

ஈரான் அரசின் ஆலோசகரும் மூத்த மதபோதகருமான ஆயதுல்லா ஹொசைன் அலி மொண்டாசாரி அவர்கள் மரணமடைந்தார்கள்.

இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் ஈரானின் குவாம் நகரில் குவிந்துள்ளனர். ஆயதுல்லா அவர்கள் மரணமடைந்ததை தொடர்ந்து இன்று அன்னாரின் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது.

எதிர் கட்சியினருக்கு இந்த இறுதி ஊர்வலம் பேரணி நடத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையலாம் என செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஆகையால் வீதிகள் முலுவதும் கலவர தடுப்பு போலிஸார்கள் குவிக்கப்பட்டுள்ளதாக மதபோதகர்களின் இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன.

தலைநகர் தெஹ்ரான் மற்றும் நஜாஃபாத்திலும் கூட்டம் கூடுவதை இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோக்கள் கான்பிக்கின்றன.

நஜாஃபாத்தில் தான் அயதொல்லா பிறந்தார். 87 வயதான ஆயதுல்லா அவர்கள் 1979 ஆம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமிய புரட்சியின் தலைவர்களில் ஒருவர், என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: