ஞாயிறு, 27 டிசம்பர், 2009

அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமருடன் சந்திப்பு

நாடு முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீண்ட காலமாக சிறையில் உள்ளோர் விடு விக்கப்பட வேண்டும் உள் ளிட்ட 14 கோரிக்கைகளு டன் அனைத்துக் கட்சி முஸ்லிம் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர்.

அக்கோரிக்கைகள் பரி சீலிக்கப்பட்டு உரிய நட வடிக்கைகள் எடுக்க மன் மோகன்சிங் உறுதியளித்த தாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், ரயில்வே இணையமைச்சருமான இ. அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற அனைத் துக் கட்சி முஸ்லிம் உறுப் பினர்களான மத்திய இணையமைச்சர் இ. அஹமது, நாடாளு மன்ற மேலவைத் தலைவர் ரஹ் மான்கான், திருமதி மொஹ்சினா கித்வாய், மஹ்மூத் மதனீ, தாரிக் அன்வர், அஸாஸ{தீன் உவைஸி, முஹம்மது அதீப், அஹமது சயீது மலேகாபாடி, ஷபீர் அலி, டாக்டர் இஜாஸ் அலி, ஷபீகுர் ரஹ்மான் பர்க், முஹம்மது ஷபி ஆகிய எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 14 முக்கிய பிரச் சினைகளை நிறை வேற்றும்படி கோரிக்கை விடுத்தார்கள்.

அவை வருமாறு-

1. வக்ஃபுசொத்துக்கள் தொடர்பாக ஜே.பி.சி. அறிக்கையை நிறைவேற்ற வும், வக்ஃபு சட்டத்தை திருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. ஹஜ் பயணம் தொடர்பாக போதிய சீர் தி ருத்தங்களை கொண்டு வர ஏற்கனவே ஒரு அமைச் சரவை குழுபரிந்துரை செய்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை.

3. முஸ்லிம் சிறு பான்மையினருக்கான இடஒதுக்கீடு தொடர் பான கோரிக்கை நீண்ட நாளாக நிலுவையில் உள் ளது. அவை தொடர்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக் கையில் குறிப்பிடப் பட் டுள்ளது. கேரளா, தமிழ் நாடு, கர்நாடக மாநிலங் களில் முஸ்லிம் களுக்கு அனுமதிக்கப்பட் டிருக் கும் ஒதுக்கீட்டின் அடிப் படையில் இட ஒதுக்கீடு பிரச்சினை தீர்க்க நட வடிக்கை எடுக்க வேண் டும்.

4. ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி பரிந்துரைகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

5. சச்சார் கமிட்டி அறிக் கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் தாம தம் ஏற்பட்டுள்ளது. பரிந் துரைகள் அமுல்படுத்து வதை கண்காணிக்க ஒரு மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும்.

6. முஸ்லிம் சிறு பான்மையினருக்கும் மற்றவர்களுக்கும் கல்வி வழங்குவதில் மத்திய அரசு தீவிரமாக இருந்தாலும் சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடைமுறைப் பிரச்சினைகள் உள்ளன. அங்கீகாரம் வழங்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும்.

7. இஸ்லாமிய வங்கி முறையை அமுல்படுத்த நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டுள் ளது. அந்த முறை வங்கித் துறைக்கு பெரிய முத லீட்டையும் முஸ்லிம்கள் மத்தியில் சேமிப்பு பழக் கத்தையும் ஏற்படுத்தும்.

8. பிரதமரால் அறிவிக் கப்பட்ட 15 அம்ச திட்டம் நிறைவேறுவதை கண் காணிப்பது வலுப்படுத்தப் பட வேண்டும்.

9. பயங்கரவாத தொடர்பு ஐயப்பாடு கார ணமாக ஏராளமானவர்கள் எந்தவித விசாரணையு மின்றி நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட் டிருக்கிறார்கள். அவர்கள் மீதுள்ள வழக்குகள் முடிக்கப்படவோ அல்லது அவர்கள் விடுதலை செய் யப்படவோ வேண்டும்.

10. உத்தேசிக்கப்பட் டுள்ள மதரஸா வாரியத்தை அமைப்பதற்கு முன் முஸ்லிம் உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், தலை வர்கள் ஆகியோரை அரசு கலந்தாலோசிக்க வேண்டும்.

11. முஸ்லிம்கள் தொடர்பான அமைப்பு களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் கட்டுப்பாடுகளும், தாமதமும் ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்.

12. மத வன்முறை தடுப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.

13. மற்ற தேசிய கமிஷன்களுக்கு கொடுக் கப்பட்டிருக்கும் அரசியல் சட்ட அந்தஸ்தை சிறு பான்மை கமிஷனுக்கும் கொடுக்க வேண்டும்.

14. அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் ஜாமிஆ மில்லியா இஸ் லாமிய பல்கலைக்கழகங் களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க வேண் டும்.

மேற்கண்ட கோரிக் கைகளை விரைவில் நிறை வேற்றித் தரும்படி வேண்டு கோள் விடுத்த எம்.பி.க்கள் சிறுபான்மை விவகாரத் துக்காக தனி அமைச்சரகம் அமைத்ததற்கும் நன்றி தெரிவித்தார்கள்.

பிரதமர் உறுதி

மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மன் மோகன்சிங் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து போதிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்பது குறித்து முடிவு செய்ய தேசிய அளவில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண் டியுள்ளது. இதுகுறித்து விரைவில் நல்ல முடிவு காணப்படும் என்று தெரி வித்தார்.

வக்ஃபு சொத்துக்களை மேம்படுத்துவது குறித்தும் அது தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்தும் பிரதமர் குறிப்பாக தனது விருப்பத்தை வெளியிட் டார். அந்த சட்டம் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் கொண்டு வரப்படும் என் றார்.

ஹஜ் பயணம் தொடர் பான சீர்திருத்தங்கள் விரைவில் அமல்படுத்தப் படும் என்றும் பிரதமர் கூறினார்.

வட்டியில்லாத வங்கித் தொழில் துறை குறித்து நிதியமைச்சருடன் கலந்தாலோசிப்பதாக பிரதமர் அறிவித்தார். நீண்டகாலமாக சட்ட விரோதமாக சிறையில் வாடுபவர்கள் குறித்து மிக விரைவில் நீதி நிலை நாட்டப்படும் என்றும் பிரதமர் சொன்னார்.

சிறுபான்மை விவகாரம் கண்காணிக்க நியமிக்கப் பட்டிருக்கும் நிலைக்குழு தலைவர்களுடன் பேசி கண்காணிப்பு வேலை களை வலுப்படுத்தும் படியும் தீவிரப்படுத்தப் படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகளை தனது கவனத்திற்கு கொண்டு வந்த தூதுக்குழு உறுப் பினர்களுக்கு பிரதமர் நன்றியை தெரிவித்துக் கொண்டதாகவும் மத்திய ரயில் இணையமைச்சரும், இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான இ.அஹமது செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: