செவ்வாய், 15 டிசம்பர், 2009

சர்வதேச இஸ்லாமிய வங்கியியல் மாநாடு

சர்வதேச இஸ்லாமிய வங்கியியல் மாநாடு

மனாமா: பொருளாதார துறையில் மாறி வரும் சூழலுக்கு தக்கவாறு புதிய யுக்திகளை வகுப்போம் (New strategies for New Economic Realities)
என்ற முழக்கத்தோடு உலகிலேயே மிகப்பெரிய இஸ்லாமிய வங்கியியல் மாநாடு பஹ்ரைனில் துவங்கியது.

டிசம்பர் 6,7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இது நடைபெறுகிறது.50 நாடுகளிலிருந்து 1200 பிரதிநிதிகளும் இஸ்லாமிய பொருளாதார வல்லுநர்களும் இதில் பங்கெடுத்துக்கொண்டுள்ளனர்.இம்மாநாட்டை பஹ்ரைன் மத்திய வங்கியின் கவர்நர் ராஷித் எம் அல் மாராஜ் துவக்கிவைத்தார். சிங்கப்பூர் மத்திய வங்கியின் கவர்நர் ஹெங்க் ஸ்வீ க்விட், கஸக்ஸ்தான் தொழில் அமைச்சர் அஸட் ஓ.இஸ்க்ஸவ், இஸ்லாமிக் கார்ப்ரேசன் டெவலப்மெண்ட் சி.இ.ஒ காலித் எம் அல் அபூதி ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

பொருளாதாரத்துறையின் வீழ்ச்சியும் இஸ்லாமிய பொருளாதார நிறுவனங்களின் நிலையானத்தன்மையும் என்ற அமர்வில் டாக்டர் ஆலா அல் யூசுஃப்(Chief Economist of Gulf Finance House),டாக்டர் ஸலாஹ் அத்தீன் எ காதிர் சயீத் (GM- Credit & Risk Management for Bahrain Islamic Bank) மற்றும் டாக்டர் மொன்தசர் பென்ம்ராத் (Executive Partner - Leader Financial Services Sector MENA, IBM Global Business Services.) ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

பிரிட்டனில் இஸ்லாமிய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு பி.பி.சி யின் மத்திய கிழக்கு தொழில் செய்திப்பிரிவு பத்திரிகையாளர் நிமா அபூவர்த தலைமை வகித்தார். இதில் ஹம்ரே பெர்சி(Chief Executive Officer of Bank of London and the Middle East), தர்சன் பிஜுர்(Director of Islamic Finance Advisory at KPMG),கில்லியன் வாம்ஸ்லி(Product Manager Debt & Specialist Securities at the London Stock Exchange), ரிச்சர்டு தாமஸ்(Chief Executive Officer of Gatehouse Bank), முனீர்கான்(Partner & Head of Islamic Finance at Simmons & Simmons.)
ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை: