செவ்வாய், 15 டிசம்பர், 2009

வங்கிகளுக்கு அமீரக மத்திய வங்கி உதவும்


துபாய்: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட துபாய் வேர்ல்டிற்கும், நக்கீல் குழுமத்திற்கும் கடன் வழங்கிய வங்கிகளுக்கு உதவுவதற்கு யு.ஏ.இ மத்திய வங்கி தயாராக உள்ளது. இந்த முயற்சி பொருளாதார சிக்கலால் பாதிப்படைந்த துறைகளுக்கு உதவிகரமாகயிருக்கும்.

நக்கீல் குழுமம்தான் கடலில் பாம் ஐலண்ட் நிர்மாணித்துள்ளது. கடந்த தினம் அபுதாபியிலிருந்து துபாய் 10 பில்லியன் டாலர் வாங்கியிருந்தது. பொருளாதாரத்துறை கடந்த ஆண்டை விட மேம்பட்டுள்ளதாக யு.ஏ.இ மத்திய வங்கி அறிவித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: