புதன், 1 செப்டம்பர், 2010

முஸ்லிம்களுக்கும் மீனவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு – ஆணை வெளியிட்டது புதுவை அரசு

புதுவையில் வாழும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 2 சதவிகித தனி இடஒதுக்கீடு அளித்து புதுவை அரசு ஆணையை கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியிட்டது. புதுவையில் இதுவரை அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் 13 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்த்து, இதில் 2 சதவிகிதம் இனி பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டும் தனியான ஒதுக்கப்படும். இதே போல் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் மீனவச் சமூகங்களுக்கு 2 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வகைச் செய்யும் ஆணையும் வெளியிடப்பட்டது.



பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பட்டியலில் பின் வரும் சமூகங்கள் இடம் பெற்றுள்ளன

1.தக்னி முஸ்லிம் (பாண்டி, காரைக்கால் மற்றும் யானம் ஆகிய பகுதிகளில் வாழ்வோர் மட்டும்

2.மாப்பிளா

3.லெப்ப்பை (இதில் மரைக்காயர், ராவுத்தர், சாயிபு, சேக், சையித் ஆகியோரும் அடங்குவர்)



மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனி இடஒதுக்கீடு பெறும் மீனவர் சமூகத்தில் பின்வருவோர் அடங்குவர்

1. செட்டியார்

2. சின்ன பட்டினவர்

3. மீனவ செட்டியார்

4. நாட்டார்

5. பர்வர்தராஜகுலம்

6. பட்டினவர்

7. பட்டினவ செட்டியார்

8. பெரிய பட்டினவர்

9. செம்பதவர்

அரசு ஆணையை இதில் காணலாம்...

கருத்துகள் இல்லை: