சனி, 25 செப்டம்பர், 2010

கஷ்மீருக்கு சுயாட்சி வழங்க வேண்டும்: பஸ்வான்

பாட்னா,செப்.24:கஷ்மீர் மாநிலத்திற்கு சுயாட்சி வழங்க வேண்டும் எனவும், அம்மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு ஆயுதச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டுமெனவும் எல்.ஜே.பி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கோரியுள்ளார்.

கஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஆனால், அரசியல் சட்டத்திற்குட்பட்டு முடியுமென்றால் கஷ்மீருக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என பஸ்வான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு கஷ்மீர் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பிரிவினைவாத தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும்.

போராட்டத்தில் கைதுச் செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலைச்செய்ய வேண்டும். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு சமர்ப்பித்த சிபாரிசுகளை அங்கீகரித்து காலதாமதம் இல்லாமல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு பஸ்வான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜூன் 11க்குப் பிறகு கஷ்மீரில் 110 சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதுக் குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கஷ்மீருக்குச் சென்ற அனைத்து கட்சி பிரதிநிதிக் குழுவில் இடம்பெற்றிருந்த பஸ்வான், ஹுர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி, ஜெ.கெ.எல்.எஃப் தலைவர் யாசின் மாலிக் ஆகியோரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

கருத்துகள் இல்லை: