செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பாபரி வழக்கில் தீர்ப்பு எப்போது - உச்சநீதிமன்றம் பிற்பகல் தீர்ப்பு வழங்கும்

பாபரி மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு எப்போது தீர்ப்பு வழங்கலாம் என்பது குறித்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா தலைமையில் நீதிபதிகள் கே.எஸ். ராதகிருஷ்ணன் மற்றும் அப்தாப் ஆலம் ஆகியோர் வழக்கை விசாரித்து வருகின்றார்கள். தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் இருத்தரப்பினர் இடையே சமரசமாக இப்பிரச்னையை முடிவுக் கொண்டு வரவேண்டும் என்று மனு செய்துள்ள திரிபாதி என்பவரின் சார்பாக வழக்குறைஞர் முக்குல் ரஸ்தோகி இப்போது தனது வாதத்தை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு பிறகு முஸ்லிம் மற்றும் ஹிந்து தரப்பு வழக்குறைஞர்களின் வாதங்களை நீதிபதிகள் கேட்டார்கள் பிறகு மத்திய அரசு சார்பாக தலைமை வழக்குறைஞர் குலாம் வாஹனவதி இருத்தரப்பும் சமசத்திற்கு தயார் என்றால் மத்திய அரசு அதற்கு உதவிடும் என்றும் இதற்கு இருத்தரப்பினரும் உடன்படிவில்லையெனில் தீர்ப்பு வழங்குவது தான் சரி என்றும் தனது வாதத்தை எடுத்துரைத்தார். இதன் பிறகு நீதிபதிகள்் உணவு இடைவேளைக்கு பிறகு விசாரணையை ஒத்திவைத்தார்கள். பிற்பகலில் தீர்ப்பு எப்போது வழங்கலாம் என்பது குறித்து தங்கள் முடிவை அறிவிப்பார்கள். நமதுஇணையத்தளம் உடனுக்குடன் இது குறித்த செய்திகளை வெளியிடும்

கருத்துகள் இல்லை: