திங்கள், 27 செப்டம்பர், 2010

பஹ்ரைனை தொடர்ந்து குவைத்திலும் ஸ்பான்சர் முறை ரத்து

குவைத்,செப்.27:வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் சர்ச்சைக்குரிய நடைமுறையை ரத்துச்செய்ய குவைத் முடிவு செய்துள்ளது.

வருகிற பிப்ரவரி மாதம் 'கஃபீல்' என்றழைக்கப்படும் ஸ்பான்சர் நடைமுறையை ரத்துச்செய்ய குவைத் அரசு தீர்மானித்துள்ளது.

பஹ்ரைன் ஏற்கனவே இந்த நடைமுறையை ரத்துச் செய்திருந்தது. ஈராக்கிடமிருந்து குவைத் விடுதலைப் பெற்ற நினைவு ஆண்டு பரிசு இது என குவைத் நாட்டின் தொழில் சமூக விவகாரத்துறை அமைச்சர் அல் அஃபாஸி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை அமைப்புகள் 'கஃபீல்' நடைமுறை அடிமைத்தனம் என குற்றஞ்சாட்டியிருந்தன. குவைத்தில் இந்தியர்கள் உட்பட 23 லட்சம் வெளிநாட்டு தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

கருத்துகள் இல்லை: