திங்கள், 6 செப்டம்பர், 2010

அடிப்படை இஸ்லாம் உலக அமைதிக்கு ஆபத்தானது: டோனி பிளேர்

டென்மார்க்,செப்.6:இஸ்லாத்தின் கடும் போக்கு அடிப்படை வாதமும் அந்த அடிப்படை வாதத்தைத் கடைப்பிடிப்போரும் உலக சமுதாய அமைதிக்கு பெரும் எதிரானாவர்கள் என்று பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் தெரிவித்துள்ளார்.

அடிப்படை இஸ்லாத்தை வாலாயம் பண்ணுவோர் தமது கொள்கைகளுக்காக இராசாயன ஆயுதம், ஆணு ஆயுதம் போன்றவற்றை மற்றவர் மீது பிரயோகிக்கலாம் என்று கருதுகிறார்கள். இப்படியான கடும் போக்கு மதவாதத்திற்கு பெரியதோர் ஸ்பொன்சர் செய்யும் அரச கட்டுமானமாக ஈரான் இருந்து வருகிறது. இப்போது யாருடைய கருத்துக்களையும் கேட்காது அணு குண்டை உருவாக்குவோம் என்று ஈரான் கடும் பிடிவாதம் பிடிப்பது இதற்கு நல்லதோர் உதாரணம் என்றும் நேற்று வழங்கிய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

பிளேயரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியாகி சர்ச்சையை கிளப்பும் நேரம் இந்தப் பேட்டியை பிபிசி வெளியீடு செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: