புதன், 15 செப்டம்பர், 2010

அமெரிக்க பெண் உளவாளியை விடுவித்தது ஈரான்

தெஹ்ரான்,செப்.15:அந்நியநாடுகளை ஆக்கிரமித்து அங்குள்ள வளங்களை சுரண்டி பல லட்சம் மக்களைக் கொன்றுவித்ததோடு, நூற்றுக்கணக்கான அப்பாவிகளை குவாண்டனாமோ, அபுகரீப் போன்ற பாதாள சிறைகளில் அடைத்து சித்திரவதைப்படுத்திவரும் அமெரிக்காவிற்கு மனிதநேயம் என்றால் என்ன என்பதை கற்பிக்கும் விதமாக உலக நடைமுறையை மாற்றியமைக்கும் விதமாக ஈரானுக்குள் அத்துமீறி நுழைந்த உளவாளிகளில் ஒருவரான பெண் ஒருவரை விடுவித்து உலகிற்கு தன்னை முன்மாதிரியாக காண்பித்துள்ளது ஈரான்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஈரானின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்கர்கள் கைதுச் செய்யப்பட்டனர். அவர்களின் இருவர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். இவர்களிடம் விசாரணையை மேற்கொண்டுவந்தது ஈரான். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் குடும்பத்தினரை ஈரானுக்கு விசா அளித்து வரவழைத்து சந்திக்கவைத்தது ஈரான் அரசு.

இந்நிலையில் இரக்க உணர்வின் அடிப்படையில் மருத்துவக் காரணங்களுக்காக ஷாரா ஷொர்டு என்ற பெண்மணியை விடுவித்துள்ளது ஈரான். 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ஷாரா. விடுவிக்கப்பட்ட ஷாரா, தனது விடுதலைக்காக முயற்சித்தவர்களுக்கும், குறிப்பாக ஈரான் அதிபருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். ஷாராவின் விடுதலையை வரவேற்றுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஈரான் அதிபரின் ஆலோசகர் மர்யம் ஷாராவிடம் கூறுகையில், "நாங்கள் உங்களின் நாட்டோடு எவ்வித உறவும் இல்லாமலிருந்தும் உன்னை உனது குடும்பத்தாரோடு தெஹ்ரானில் சந்திக்கவைத்தோம். கருணை உணர்வுக்கு இது சிறந்த உதாரணமாகும். இதனை நாங்கள் திருக்குர்ஆனிலிருந்து கற்றுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா இந்த நடைமுறையை எப்பொழுது கையாளப் போகிறது?இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்காமலிருந்தாலே போதும் என்பது நடுநிலையாளர்களின் கருத்து.

press tv செய்தியிலிருந்து

கருத்துகள் இல்லை: