சனி, 25 செப்டம்பர், 2010

டெல்லி ஜூம்மா மசூதி தாக்குதல் தொடர்பான இ-மெயில் நார்வே நாட்டு 'சர்வர்' மூலம் அனுப்பப்பட்டுள்ளது: ப.சிதம்பரம்

புதுடெல்லி,செப்.25:டெல்லி ஜும்மா மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அனுப்பப்பட்ட மிரட்டல் இ-மெயில் நார்வே நாட்டு சர்வர் மூலம் வந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த அவர் இது குறித்து மேலும் கூறியுள்ளது:

இந்திய முஜாகிதீன் என்ற அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்ட மிரட்டல் இ-மெயில் ஜிபிஎஸ் வசதியுள்ள செல்போனிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த மெயில் நார்வே நாட்டு சர்வர் மூலம் வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

தாக்குதல் நடந்து சில மணி நேரத்துக்குப் பின் வந்த இந்த இ-மெயிலுக்கும் தாக்குதல் சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றே தெரிகிறது என்று சிதம்பரம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: