ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

ஹிஜாப் அணிந்த மம்தா:சர்ச்சையை கிளப்பிய ரெயில்வே விளம்பரம்

கொல்கத்தா,செப்.12:ஹிஜாப் அணிந்து ஈத் தொழுகையில் கலந்துக் கொள்ளும் மம்தாவின் விளம்பர புகைப்படம் மேற்குவங்காளத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரெயில்வே விளம்பரத்தில்தான் மம்தாவின் புகைப்படம் வெளியானது. ஈதுல் ஃபித்ர் பெருநாளை முன்னிட்டு மேற்குவங்காளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள புதிய ரெயில்வே திட்டங்கள் தொடர்பாகத்தான் ரெயில்வே விளம்பரம் வெளியிட்டிருந்தது.

அடுத்த சட்டசபை தேர்தலில் மேற்குவங்காளத்தின் முதல்வராக துடிக்கும் மம்தா பானர்ஜி முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்காக போட்ட வேடம் என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசுப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கையை ஏற்படுத்த மத்திய அமைச்சர் ஒருவர் மதச்சின்னங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக சி.பி.எம் தலைவர்களில் ஒருவரான முஹம்மது ஸலீம் குற்றஞ்சாட்டுகிறார்.

"அரசியல் தலைவர் என்ற முறையில் அவருக்கு எந்த ஆடையையும் அணியலாம். எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுதான் அவருடைய பணி. இந்த செய்தியில் எனக்கு குழப்பம் ஒன்றும் தோன்றவில்லை" என கொல்கத்தாவில் திப்புசுல்தான் மஸ்ஜிதின் ஷாஹி இமாம் மவ்லான பர்கத்தி தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை: