செவ்வாய், 28 செப்டம்பர், 2010

பாலஸ்தீன சிறுவன் மீதான பாலியல் தாக்குதல் - விசாரணைக்கு இஸ்ரேல் தடை

பாலஸ்தீன் சிறுவனை தாக்கி, பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் செய்த இஸ்ரேலிய ஆய்வாளர் மீது அச்சிறுவன் கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை செய்ய இஸ்ரேல் பெரும் தடைகற்களை உருவாகுவதாக சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு (The Defense For Children International (DCI) இஸ்ரேல் மீது குற்றம் சுமத்தியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் அச்சிறுவன் அளித்த புகாரில் கற்களை வீசியதற்காக தன்னை கைதுசெய்த இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கு கரையிலுள்ள இஸ்தியன் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கும் போது அவர்கள் தன்னை அடித்ததாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறியிருந்தான். மேலும் சிறுவனின் கைவிலங்கிலும் பிறப்புறுப்பிலும் மின்சார கிளிப்புகளை மாட்டி மின்சாரம் பாய்ச்சப்போவதாகவும்(Electric Shock) அவனை மிரட்டி பயமுறுத்தியுள்ளனர்.
ஆகஸ்ட் 15 ல் சிறுவன் புகார் செய்ததை தொடர்ந்து அவனை வழக்கு சம்பந்தமாக விசரிக்கவேண்டுமென்று இஸ்தியன் விசாரணை நிலையத்திற்கு அவனது வழக்கறிஞர் இல்லாமல் தனியாக வருமாறு கூறியுள்ளனர். மேலும் அவனது வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தால் விசாரணை நடத்த மாட்டோம் என்றும் மிரட்டியுள்ளனர் என DCI அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆய்வாளர் மீதான இவ்வழக்கிற்கு பெரும் தடையை இஸ்ரேல் ஏற்படுத்துகின்றது. இஸ்ரேலிய சட்டப்படி வழக்கறிஞர் வைத்துதான் எந்த வழக்கையும் நடத்த வேண்டும் வழக்கறிஞர் இல்லாமல் நடத்தச்சொல்லுவது வழக்கின் விசாரணையை மிகவும் பாதிக்கும் என்றும் DCI அமைப்பு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: