வியாழன், 30 செப்டம்பர், 2010

அல் அக்ஸாவுக்குள் ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளரின் திடீர் பிரவேசம்

கடந்த புதன்கிழமை (29.09.2010) சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் புனித மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் பிரவேசித்த யூத ஆக்கிரமிப்பாளர்கள்> இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸார் புடைசூழ அங்கு உலாவந்ததோடு> அதனை சேதப்படுத்தவும் முயன்றதாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி ஸியோனிஸவாதிகள் மஃரிபா நுழைவாயிலினூடே மஸ்ஜிதுக்குள் பிரவேசித்தனர் என்று அவர்கள் குறிப்பிட்டனர். மஃரிபா நுழைவாயிற் பிரதேசம் 1967 ஆம் ஆண்டு ஜெரூசலம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்குள்ளானதில் இருந்து இன்று வரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அல் அக்ஸாவின் பாதுகாப்புப் பணியாளர்கள் மேலும் கருத்துரைக்கையில்> இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரதும் ஆக்கிரமிப்புப் பொலிஸாரினதும் ஒத்துழைப்போடு அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் சிறுசிறு குழுக்களாகப் பிரவேசித்த ஸியோனிஸ ஆக்கிரமிப்பாளர்கள்> அங்கு இனவெறியைத் தூண்டும் விதமான பிரசங்கங்களை நிகழ்த்தி 'தல்மூ'திய சடங்குகளை மேற்கொண்டதோடல்லாமல்> அவர்களில் சிலர் மஸ்ஜிதை சேதப்படுத்தவும் முயன்றனர் என்றும்> இதற்கெதிரான எத்தகைய சட்ட நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: