ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த ஆட்சேபனை ஆணையத்துக்கு அனுப்பப்படும்: முதல்வர் வைத்திலிங்கம்

புதுச்சேரி, ஆக. 7: முஸ்லிம் இடஒதுக்கீடு குறித்த ஆட்சேபனை ஆணையத்துக்கு அனுப்பப்படும் என முதல்வர் வைத்திலிங்கம் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் பா.ம.க. உறுப்பினர் அனந்தராமன் பேசியதாவது:-

கடந்த 2004-ம் ஆண்டு தங்கமணி கமிஷனின் பரிந்துரையின் பேரில் தான் மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமானால் 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் செய்ய முடியும். மேலும் முஸ்லிம்கள் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் தான் அடங்குவார்கள். எனவே அவர்களுக்கு பிற் படுத்தப்பட்டோர் பிரிவிலேயே உள்ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து முதல்வர் வைத்திலிங்கம் பேசியதாவது:-

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பேரிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளோம். இதில் உங்களின் ஆட்சேபனையை ஆணையத்துக்கு அனுப்ப உள்ளோம். இதன் பிறகு ஆணையம் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். காங்கிரஸ் அரசு தான் முதல் முறையாக இடஒதுக்கீட்டையே அமுல்படுத்தியது.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: