திங்கள், 31 ஆகஸ்ட், 2009

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் விரைவில் அழியும்: லாலுபிரசாத்

பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.

பா.ஜனதா கட்சியில் நடைபெற்று வரும் மோதல் குறித்து, ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பா.ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அவர்கள் செய்த பாவங்களுக்கான தண்டனையை அவர்கள் விரைவில் அனுபவிப்பார்கள். ஏழை மக்களுக்கு எதிராக அவர்கள் செய்த தவறுகளுக்கு அவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்.

பா.ஜனதா கட்சியினர் நடத்திய குஜராத் கலவரம் மற்றும் அவர்கள் செய்த அனைத்து தவறுகளையும் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.

பா.ஜனதா கட்சியினர் விரைவில் தங்கள் கட்சியை ஒழுங்குப்படுத்தி மீண்டும் எதிர்கட்சி பணியை ஆற்ற வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை: