செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களால் அரசு பஸ் நிறுவனத்திற்கு ரூ. 7.5 லட்சம் நஷ்டம்?



முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன்திமுகவில் சேருவதற்கு திங்கள் கிழமை சென்னை வந்த வகையில், மதுரையை தலைமையிடமாகக் கொண்ட அரசுப் போக்குவரத்துக் கழக கோட்டத்துக்கு ரூ. 7.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
தனி நபர்கள் அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்துச் செல்லவிரும்பினனால் 55 இருக்கைகளுக்கு ஒன்றரை மடங்கு கட்டணம் என்ற அடிப்படையில் பணம் செலுத்தவேண்டும் என்பது விதி . தனியாக எடுத்துச் செல்வதால் இடையில் வேறு பயணிகளை ஏற்றமுடியாது என்பதால், அரைப் பங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இப்போது அரசு பஸ்களில் கிலோ மீட்டருக்கு 28 பைசா கட்டணம் உள்ளது. இருந்தாலும், எக்ஸ்பிரஸ், பி . பி . என்றபெயர்களில் கிலோ மீட்டருக்கு 32 பைசாவரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் மதுரை கோட்டத்தில் 60 அரசு பஸ்களை வாடகைக்கு எடுத்து, சென்னை வந்தனர்.இவர்களுக்கு கிலோ மீட்டருக்கு 28 பைசா என்ற அளவிலேயே கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றரை மடங்கு வசூலிக்கப்படவில்லை. ஒரு பங்கு மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இருக்கைக்கும் ரூ. 245 என்ற அளவி ல் போக்குவரத்துக் கழகத்துக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்களுக்காக பஸ்கள் கொடுத்ததில் இந்தப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ. 7.5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் மாநாடுகளுக்கு வாடகை இல்லாமல் தனியார் பஸ்களை எடுத்துச் செல்கிறார்கள் என்று முன்பு குற்றஞ்சாட்டப்படுவது உண்டு. அரசு பஸ்களும் கூட இவ்வாறு பயன்படுத்தப்படுவதாகக் கூறியதுண்டு . இப்போது அதில் மாற்றங்கள் வந்துவிட்டன. இருந்தாலும், ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்துக்கு ரூ. 7.50 லட்சம் நஷ்டம் ஏற்படுவதற்கு ஆளுங்கட்சியில் புதிதாகச் சேர்ந்துள்ள தொண்டர்கள் காரணமாக இருந்துள்ளனர்.

இதுபற்றி யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் போக்குவரத்துக் கழக நிர்வாகிகள் மவ்னமாக உள்ளனர்.

நன்றி;தினமணி, 11 -08 -09

கருத்துகள் இல்லை: