ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

சத்தியத்தின் பாதையில் கல் போட்டாலென்ன? முள் போட்டாலென்ன?

சர்வதேசப் பிரிவு: இத்தாலி நாட்டு முஸ்லிம் விவசாய மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் எதிர்வரும் ரமழானில் நோன்பிருப்பதை தடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றம் தடைச்சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.



மேற்படிச் சட்டத்தின்படி, முஸ்லிம் தொழிலாளி நோன்பு நோற்றால், இதுகுறித்து முதலில் எச்சரிக்கப்படும். இதுதொடருமாயின் குறித்த தொழிலாளியை வேலை நிறுத்தம் செய்ய முதலாளிக்கு அதிகாரமுண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று முஸ்லிம் தொழிலாளர் நோன்பிருக்காத வகையில் பலாத்காரமாக நீர்புகட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் தொடருகின்ற இஸ்லாமிய வளர்ச்சி, அந்நாட்டுத் தலைவர்களை தளரச் செய்துள்ளது. இதனால் இப்படியான சட்டங்களை ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளைக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இவற்றின் மூலம் இஸ்லாமிய எழுச்சியை முடக்குவதே இவர்களின் குறிக்கோளாகும்.
சத்தியத்தின் பாதையில் கல் போட்டாலென்ன? முள் போட்டாலென்ன? உபாதை செய்யும் இது போன்ற செயல்கள் நம் ஈமானை பலப்படுத்துமே தவிர நம் ஈமான் குன்றிவிடாது.மேலும் இது அல்லாஹ் தந்த சத்தியமார்கம் இதை சுன்டைக்காயெல்லம் அழித்துவிட முடியாது. மேலும், வேகமாக இஸ்லாம் இத்தாலியில் வளரக்கூடிய ஆரம்பத்தின் அறிகுறிதான் இது.

கருத்துகள் இல்லை: