வியாழன், 13 ஆகஸ்ட், 2009

செத்துவிட்டதய்யா சனநாயகம்.

குஜராத் கலவர வழக்கில் குற்றவாளிகள் 29 பேர் விடுதலை
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பான வழக்கிலிருந்து 29 பேரை நீதிமன்றம் விடுதலை செய்து விட்டது.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு எதிராக மிகப் பெரிய கலவரத்தை சங் பரி்வார் அமைப்புகள் தொடங்கின. இதில் சிக்கி 10,000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்கள், கொலைகள் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அபாசனா என்ற கிராமத்தில் 6 முஸ்லீம் சமுதாயத்தினர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் 31 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் இருந்தபோது 2 பேர் இறந்து விட்டனர். மற்ற 29 பேர் மீதும் விசாரணை நடந்து வந்தது.இந்த நிலையில் இவர்கள் 29 பேர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அனைவரையும் விடுவித்து விட்டது.
நாளை கொலைக்குற்றவாளிகள் அவர்கள் இந்துகளாக இருந்தால் குறிப்பாக முஸ்லிம்களை கொலை செய்தால் சி.பி.ஐ உள்பட எந்த உயர் துறையும் கைது செய்யவோ ,வழக்குத் தொடரவோ முடியாது போகலாம்!காரணம் மத்திய அரசு சொல்வதை குஜராத் கேடி அரசு எதையும் பின்பற்றுவதில்லை காவிகள் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூச்சலிடுவதுபோல் நாட்டில் குஜராத்திற்கு சிறப்பு அங்கிகாரம் ,சட்டம் கொண்டு வந்தாலும் வரலாம்

கருத்துகள் இல்லை: