சனி, 15 ஆகஸ்ட், 2009

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வெளியடும் சுதந்திர திருநாள் வாழ்த்துச் செய்தி

நாட்டு மக்கள் அனைவருக்கும் 63வது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடாக இன்று பரிணமித்திருப்பதும் அதன் குடிமக்களாக நாம் வாழ்வதும் மகிழ்ச்சிகுரியதாகும். இருப்பினும் நமது நாட்டின் குடிமக்களில் கனிசமானவர்கள் இன்னும் வறுமையின் கடும் பிடியில் சிக்கி தவிப்பதும், கழிவிடம் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிப்பதும் வேதனை அளிப்பதாக உள்ளது. அரசு இதற்காக பல திட்டங்கள் தீட்டினாலும் இம்மக்களின் துன்பங்கள் முழுமையாக துடைக்கப்படவில்லை. இந்த விடுதலை திருநாளில் வறுமையில் சிக்கித் தவிக்கும் நமது சக குடிமக்களின் துன்பங்களையும் துயரங்களையும் உறுதி எடுப்போமாக.

கருத்துகள் இல்லை: