புதன், 12 ஆகஸ்ட், 2009

இந்தோனேசியாவில் விமானம் விழுந்து நொறுங்கியது

இந்தோனேசியா அருகேயுள்ள பபுவா நியூகுனியா நாட்டில் இருந்து கோகோயாவுக்கு ஒரு பயணிகள் குட்டி விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 13 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 9 பேர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள்.

கோகோயா அருகே சென்றபோது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த விமானம் ஒரு காட்டுப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

தகவல் அறிந்ததும் கோகோயா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். ஆனால், அங்கு சீதோஷ்ண நிலை சரியில்லை. இதை தொடர்ந்து அவர்களால் காட்டுப் பகுதிக்குள் செல்ல முடியவில்லை. விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: