புதன், 10 பிப்ரவரி, 2010

ஃபலஸ்தீன் மின்சார நிலையங்களுக்கெதிராக இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது

ஜெருசலம்:ஃபலஸ்தீன் மின்சார நிலையங்களுக்கெதிரான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது. 2009 ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக ரெட் கிரஸண்ட் சொசைட்டி குற்றஞ்சாட்டுகிறது.

கடந்த வருடம் மேற்கு கரையிலும், கஸ்ஸாவிலும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு எதிராக 15 தடவைக்கும் மேல் இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒருவர் கொல்லப்பட்டார். 10க்கு அதிகமானோருக்கு காயமும் ஏற்பட்டது.

காஸ்ஸா போரின் போது ரெட் கிரஸண்ட் சொசைட்டியின் தலைமையகத்தின் மீது சர்வதேச அளவில் தடைச்செய்யப்பட்டுள்ள வெள்ளை பாஸ்பரஸை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது எனவும், இஸ்ரேல் ராணுவம் 440 தடவை சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது எனவும் ரெட் கிரஸண்ட் சொசைட்டி சுட்டிக்காட்டுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: