புதன், 10 பிப்ரவரி, 2010

பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ வின் தாக்குதலில் காயமடைந்த வழக்கறிஞர் மரணம்

புதுடெல்லி:பா.ஜ.க வின் முன்னாள் எம்.எல்.ஏ வான விநோத் சர்மா கடந்த ஜனவரி 24 ஆம் தேதி போலீஸார் முன்னிலையில் வைத்து கம்பால் தலையில் அடித்ததில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பாட்லா ஹவுஸ் வழக்கில் எதிர் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிவந்த ஆர்.கே.நஸீம் டெல்லி ஜானக்புரி மாதா சண்ணன் தேவி மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார்.

சொத்துத் தகராறுத் தொடர்பாக உறவினரான ஆர்.கே.நஸீமை விநோத் சர்மா தாக்கியதாக கூறப்படுகிறது.கடந்த 29 ஆம் தேதி காவல்துறை சர்மாவை கைதுச்செய்தது. பாட்லா ஹவுஸ் வழக்கு மட்டுமல்லாமல் ஜெசிக்கா லால் கொலை வழக்கு, பிரியதர்ஷினிமட்டு கொலைவழக்கு ஆகியவற்றிலும் எதிர் தரப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர் நஸீம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: